அத்தியாயம்: 15, பாடம்: 08, ஹதீஸ் எண்: 2067

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

‏كُنَّا مَعَ ‏ ‏طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏وَنَحْنُ ‏ ‏حُرُمٌ ‏ ‏فَأُهْدِيَ لَهُ طَيْرٌ ‏ ‏وَطَلْحَةُ ‏ ‏رَاقِدٌ فَمِنَّا مَنْ أَكَلَ وَمِنَّا مَنْ ‏ ‏تَوَرَّعَ ‏ ‏فَلَمَّا اسْتَيْقَظَ ‏ ‏طَلْحَةُ ‏ ‏وَفَّقَ ‏ ‏مَنْ أَكَلَهُ وَقَالَ ‏ ‏أَكَلْنَاهُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நாங்கள் (உம்ராப் பயணமொன்றில்) தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களுடன் இருந்தோம்; நாங்கள் இஹ்ராம் பூண்டிருந்தோம். அப்போது தல்ஹா (ரலி) அவர்களுக்காக (வேட்டையாடப்பட்ட) ஒரு பறவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்களோ உறங்கிக்கொண்டிருந்தார்கள். எங்களில் சிலர் அதைச் சாப்பிட்டனர். வேறுசிலர் (சந்தேகம் ஏற்பட்டதால் சாப்பிடாமல்) பேணுதலாக இருந்துவிட்டனர். தல்ஹா (ரலி) உறக்கத்திலிருந்து விழித்தபோது, அதைச் சாப்பிட்டவர்களின் செயலைச் சரி கண்டார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இ(வ்வாறு வேட்டையாடப்பட்ட)தைச் சாப்பிட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளார் : தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் உஸ்மான் அத்தைமீ (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment