அத்தியாயம்: 16, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2496

‏و حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَطَاءٌ: ‏

قَدِمَ ‏ ‏جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏مُعْتَمِرًا فَجِئْنَاهُ فِي مَنْزِلِهِ فَسَأَلَهُ الْقَوْمُ عَنْ أَشْيَاءَ ثُمَّ ذَكَرُوا ‏ ‏الْمُتْعَةَ ‏ ‏فَقَالَ ‏ ‏نَعَمْ ‏ ‏اسْتَمْتَعْنَا ‏ ‏عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏وَعُمَرَ

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) உம்ராவிற்காக வந்தபோது, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு நாங்கள் சென்றோம். அவர்களிடம் மக்கள் பல விஷயங்களைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். பிறகு அவர்களிடம் அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் பற்றியும் பேசினர். அப்போது ஜாபிர் (ரலி), “ஆம்; நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் அல்முத்ஆ (இடைக்காலத்) திருமணம் செய்திருந்தோம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)

Share this Hadith: