அத்தியாயம்: 17, பாடம்: 12, ஹதீஸ் எண்: 2654

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ: ‏

‏إِذَا تَزَوَّجَ الْبِكْرَ عَلَى ‏ ‏الثَّيِّبِ ‏ ‏أَقَامَ عِنْدَهَا سَبْعًا وَإِذَا تَزَوَّجَ ‏ ‏الثَّيِّبَ ‏ ‏عَلَى الْبِكْرِ أَقَامَ عِنْدَهَا ثَلَاثًا ‏


قَالَ ‏ ‏خَالِدٌ ‏ ‏وَلَوْ قُلْتُ إِنَّهُ رَفَعَهُ لَصَدَقْتُ وَلَكِنَّهُ قَالَ السُّنَّةُ كَذَلِكَ

ஒருவர் கன்னி கழிந்த பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, மற்றொரு கன்னிப் பெண்ணை மணந்துகொண்டால், (முதலில்) கன்னிப் பெண்ணிடம் ஏழு நாட்கள் தங்குவார். ஒருவர் கன்னிப் பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, கன்னி கழிந்த பெண்ணை மணந்தால் (முதலில்) கன்னி கழிந்த பெண்ணிடம் மூன்று நாட்கள் தங்குவார்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

“இதை அனஸ் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார்கள் என்று நான் சொல்லலாம். ஆயினும், அனஸ் (ரலி), ‘இதுவே நபிவழியாகும்’ என்று (மட்டுமே) கூறினார்கள்” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான காலித் பின் மஹ்ரான் (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith: