அத்தியாயம்: 17, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2664

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: ‏

‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏هَلَكَ وَتَرَكَ تِسْعَ بَنَاتٍ ‏ ‏أَوْ قَالَ سَبْعَ ‏ ‏فَتَزَوَّجْتُ امْرَأَةً ‏ ‏ثَيِّبًا ‏ ‏فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏جَابِرُ ‏ ‏تَزَوَّجْتَ قَالَ قُلْتُ نَعَمْ قَالَ فَبِكْرٌ أَمْ ‏ ‏ثَيِّبٌ ‏ ‏قَالَ قُلْتُ بَلْ ‏ ‏ثَيِّبٌ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏ ‏فَهَلَّا ‏ ‏جَارِيَةً ‏ ‏تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ ‏ ‏أَوْ قَالَ تُضَاحِكُهَا وَتُضَاحِكُكَ ‏ ‏قَالَ قُلْتُ لَهُ إِنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏هَلَكَ وَتَرَكَ تِسْعَ بَنَاتٍ ‏ ‏أَوْ سَبْعَ ‏ ‏وَإِنِّي كَرِهْتُ أَنْ آتِيَهُنَّ ‏ ‏أَوْ أَجِيئَهُنَّ ‏ ‏بِمِثْلِهِنَّ فَأَحْبَبْتُ أَنْ أَجِيءَ بِامْرَأَةٍ تَقُومُ عَلَيْهِنَّ وَتُصْلِحُهُنَّ قَالَ فَبَارَكَ اللَّهُ لَكَ ‏ ‏أَوْ قَالَ لِي خَيْرًا ‏


وَفِي رِوَايَةِ ‏ ‏أَبِي الرَّبِيعِ ‏ ‏تُلَاعِبُهَا وَتُلَاعِبُكَ وَتُضَاحِكُهَا وَتُضَاحِكُكَ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ نَكَحْتَ يَا ‏ ‏جَابِرُ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ إِلَى قَوْلِهِ امْرَأَةً تَقُومُ عَلَيْهِنَّ وَتَمْشُطُهُنَّ قَالَ أَصَبْتَ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ

என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்தபோது ஒன்பது (அல்லது ஏழு) பெண் மக்களை விட்டுச் சென்றார்கள். ஆகவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக்கொண்டேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஜாபிரே! நீ மணமுடித்துக் கொண்டாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அதற்கு, “கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்), அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கன்னிப் பெண்ணை மணந்திருந்தால், நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே! அல்லது நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) ஒன்பது அல்லது ஏழு பெண் மக்களை விட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அவர்களையொத்த ஒரு (இளவயதுப்) பெண்ணை (மணந்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை; அவர்களைப் பராமரித்துச் சீராகப் பேணி நிர்வகிக்கும் (பக்குவமுள்ள) ஒரு பெண்ணையே (மனைவியாக அவர்களிடம்) அழைத்துச் செல்ல நான் விரும்பினேன்” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ் உனக்கு வளத்தை (அல்லது) சிறப்பை அளிப்பானாக” என்று என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

அபுர்ரபீஉ அஸ்ஸஹ்ரானீ (ரஹ்) வழி அறிவிப்பில், “ … நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

குதைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘திருமணம் முடித்துக்கொண்டாயா, ஜாபிரே?’ என்று கேட்டார்கள் …” என ஜாபிர் (ரலி) கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து, “ … மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை(க் கருத்தாக)ப் பராமரித்துக்கொள்ளும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே கன்னி கழிந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்தேன்)” என்று நான் கூறியதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘நீ செய்தது சரிதான்’ என்று கூறினார்கள்” என்பதோடு ஹதீஸ் முடிந்துவிடுகிறது.

Share this Hadith: