அத்தியாயம்: 17, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2622

‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏عِرَاكِ بْنِ مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏اسْتَأْذَنَ عَلَيَّ ‏ ‏أَفْلَحُ بْنُ قُعَيْسٍ ‏ ‏فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ فَأَرْسَلَ إِنِّي عَمُّكِ أَرْضَعَتْكِ امْرَأَةُ أَخِي فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ فَجَاءَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ ‏ ‏لِيَدْخُلْ عَلَيْكِ فَإِنَّهُ عَمُّكِ

அஃப்லஹ் பின் குஐஸ் (ரலி) (என் பால்குடித் தந்தையின் சகோதரர்) எனது வீட்டிற்குள் நுழைவதற்கு என்னிடம் அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். பின்னர் அவர் (ஒருவரை என்னிடம்) அனுப்பி, “என் சகோதரரின் மனைவி உங்களுக்குப் பாலூட்டியிருக்கிறார்; நான் உங்களுக்குப் பால்குடித் தந்தையின் சகோதரன் ஆவேன் (எனவே நீங்கள் எனக்கு அனுமதியளியுங்கள்)” என்று கூறினார். அப்போதும் அவருக்கு நான் அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்ததும் இதைத் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “அவர் உன் வீட்டிற்குள் வரலாம்; ஏனெனில், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் ஆவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 17, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2621

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏عِرَاكٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا أَخْبَرَتْهُ: ‏

‏أَنَّ عَمَّهَا مِنْ الرَّضَاعَةِ يُسَمَّى ‏ ‏أَفْلَحَ ‏ ‏اسْتَأْذَنَ عَلَيْهَا فَحَجَبَتْهُ فَأَخْبَرَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ لَهَا ‏ ‏لَا تَحْتَجِبِي مِنْهُ فَإِنَّهُ يَحْرُمُ مِنْ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنْ النَّسَبِ

ஆயிஷா (ரலி) என்னிடம், “என் பால்குடித் தந்தையின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) என் வீட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி கேட்டார். நான் அவருக்கு (அனுமதி அளிக்காமல்) திரையிட்டுக்கொண்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைத் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “நீ அவரிடம் திரையிட்டு(மறைத்து)க்கொள்ள வேண்டாம். ஏனெனில், இரத்த உறவால் மணமுடிக்கத் தகாத உறவுகளெல்லாம் பால்குடியாலும் மணமுடிக்கத் தகாத உறவுகளாகிவிடும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 17, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2620

‏و حَدَّثَنِي ‏ ‏الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَخْبَرَتْهُ قَالَتْ: ‏

‏اسْتَأْذَنَ عَلَيَّ عَمِّي مِنْ الرَّضَاعَةِ ‏ ‏أَبُو الْجَعْدِ ‏ ‏فَرَدَدْتُهُ قَالَ لِي ‏ ‏هِشَامٌ ‏ ‏إِنَّمَا هُوَ ‏ ‏أَبُو الْقُعَيْسِ ‏ ‏فَلَمَّا جَاءَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَخْبَرْتُهُ بِذَلِكَ قَالَ ‏ ‏فَهَلَّا أَذِنْتِ لَهُ ‏ ‏تَرِبَتْ ‏ ‏يَمِينُكِ ‏ ‏أَوْ يَدُكِ

ஆயிஷா (ரலி) என்னிடம், “என் பால்குடித் தந்தையின் சகோதரர் அபுல் ஜஅத் (ரலி) வந்து என் வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்டார். நான் அதை மறுத்துவிட்டேன். பின்னர் நபி (ஸல்) வந்ததும் நடந்ததைத் தெரிவித்தேன்” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல், “உனது கை / வலக் கை, மண்ணைக் கவ்வட்டும்! நீ அவருக்கு அனுமதியளித்திருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா (ரஹ்)


குறிப்பு :

அவர் (ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தையின் சகோதரர்) அபுல் குஐஸ் ஆவார்” என்று ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) கூறினார்கள்.

அத்தியாயம்: 17, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2619

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏جَاءَ عَمِّي مِنْ الرَّضَاعَةِ يَسْتَأْذِنُ عَلَيَّ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى ‏ ‏أَسْتَأْمِرَ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُلْتُ إِنَّ عَمِّي مِنْ الرَّضَاعَةِ اسْتَأْذَنَ عَلَيَّ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلْيَلِجْ ‏ ‏عَلَيْكِ عَمُّكِ قُلْتُ إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يُرْضِعْنِي الرَّجُلُ قَالَ إِنَّهُ عَمُّكِ ‏ ‏فَلْيَلِجْ ‏ ‏عَلَيْكِ ‏


و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ أَنَّ أَخَا ‏ ‏أَبِي الْقُعَيْسِ ‏ ‏اسْتَأْذَنَ عَلَيْهَا فَذَكَرَ ‏ ‏نَحْوَهُ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ اسْتَأْذَنَ عَلَيْهَا ‏ ‏أَبُو الْقُعَيْسِ

என் பால்குடித் தந்தையின் சகோதரர் (அஃப்லஹ்) என் வீட்டிற்கு வந்து, வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவு பெறாமல் அவருக்கு அனுமதியளிக்க முடியாது” என்று மறுத்துவிட்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்ததும் நான், “என் பால்குடித் தந்தையின் சகோதரர் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். நான் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் உன் வீட்டிற்குள் வரலாம்” என்று கூறினார்கள். அப்போது நான், “(அவருடைய) மனைவி தான் எனக்குப் பாலூட்டினார்; அவர் எனக்குப் பாலூட்டவில்லையே?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மீண்டும்) என்னிடம், “அவர் உன்னுடைய (பால்குடித்) தந்தையின் சகோதரர் ஆவார். எனவே, அவர் உன் வீட்டிற்குள் வரலாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

ஹம்மாதிப்னு ஸைத் (ரஹ்) வழி அறிவிப்பு, “அபுல் குஐஸின் சகோதரர், ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார் …” என ஆரம்பமாகிறது.

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “ஆயிஷா (ரலி) அவர்களிடம் (அவர்களின் பால்குடித் தந்தை) அபுல் குஐஸ் (ரலி) அனுமதி கேட்டார்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 17, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2618

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَخْبَرَتْهُ: ‏

‏أَنَّهُ جَاءَ ‏ ‏أَفْلَحُ أَخُو أَبِي الْقُعَيْسِ ‏ ‏يَسْتَأْذِنُ عَلَيْهَا بَعْدَ مَا نَزَلَ الْحِجَابُ وَكَانَ ‏ ‏أَبُو الْقُعَيْسِ ‏ ‏أَبَا ‏ ‏عَائِشَةَ ‏ ‏مِنْ الرَّضَاعَةِ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَقُلْتُ وَاللَّهِ لَا آذَنُ ‏ ‏لِأَفْلَحَ ‏ ‏حَتَّى أَسْتَأْذِنَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِنَّ ‏ ‏أَبَا الْقُعَيْسِ ‏ ‏لَيْسَ هُوَ أَرْضَعَنِي وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَتُهُ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَلَمَّا دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ‏ ‏أَفْلَحَ أَخَا أَبِي الْقُعَيْسِ ‏ ‏جَاءَنِي يَسْتَأْذِنُ عَلَيَّ فَكَرِهْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى أَسْتَأْذِنَكَ قَالَتْ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ائْذَنِي لَهُ ‏


قَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏فَبِذَلِكَ كَانَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏تَقُولُ ‏ ‏حَرِّمُوا مِنْ الرَّضَاعَةِ مَا تُحَرِّمُونَ مِنْ النَّسَبِ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ جَاءَ ‏ ‏أَفْلَحُ أَخُو أَبِي الْقُعَيْسِ ‏ ‏يَسْتَأْذِنُ عَلَيْهَا ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمْ وَفِيهِ فَإِنَّهُ عَمُّكِ ‏ ‏تَرِبَتْ ‏ ‏يَمِينُكِ ‏ ‏وَكَانَ ‏ ‏أَبُو الْقُعَيْسِ ‏ ‏زَوْجَ الْمَرْأَةِ الَّتِي أَرْضَعَتْ ‏ ‏عَائِشَةَ

அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) என் வீட்டிற்கு வந்து, உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்டார். அப்போது நான், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்காமல் அஃப்லஹ் (ரலி) அவர்களுக்கு அனுமதியளிக்கமாட்டேன். ஏனெனில், அபுல் குஐஸ் எனக்குப் பாலூட்டவில்லை; அவருடைய மனைவிதான் எனக்குப் பாலூட்டினார்” என்று கூறினேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்ததும் நான் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! (என் பால்குடித் தந்தை) அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். உங்களிடம் அனுமதி கேட்காமல் அவருக்கு அனுமதியளிக்க எனக்கு விருப்பமில்லை. (எனவே, அவருக்கு நான் அனுமதியளிக்க வில்லை)” என்று தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்), “அவருக்கு நீ அனுமதியளிக்கலாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

“அபுல் குஐஸ், ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தை ஆவார். ஹிஜாப் சட்டம் அருளப்பட்ட பின் இச்சம்பவம் நடைபெற்றது.

இதன் அடிப்படையில்தான் ஆயிஷா (ரலி), “இரத்த உறவால் மணமுடிக்கத் தகாத உறவுகளாக நீங்கள் ஆக்குகின்ற உறவுகளை, பால்குடி உறவின் மூலமும் மணமுடிக்கத் தகாத உறவுகளாக ஆக்கிவிடுங்கள்” என்று கூறுவார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான உர்வா (ரஹ்) கூறுகின்றார்.

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “உனது வலக்கை மண்ணைக் கவ்வட்டும். அவர் (அஃப்லஹ்) உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் ஆவார்” என்று நபி (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது. மேலும், “அபுல் குஐஸ், ஆயிஷா (ரலி) அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாயின் கணவர் ஆவார்” என்றும் காணப்படுகிறது.

அத்தியாயம்: 17, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2617

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا أَخْبَرَتْهُ: ‏

‏أَنَّ ‏ ‏أَفْلَحَ ‏ ‏أَخَا ‏ ‏أَبِي الْقُعَيْسِ ‏ ‏جَاءَ يَسْتَأْذِنُ عَلَيْهَا وَهُوَ عَمُّهَا مِنْ الرَّضَاعَةِ بَعْدَ أَنْ أُنْزِلَ الْحِجَابُ قَالَتْ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَخْبَرْتُهُ بِالَّذِي صَنَعْتُ ‏ ‏فَأَمَرَنِي أَنْ آذَنَ لَهُ عَلَيَّ ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏أَتَانِي عَمِّي مِنْ الرَّضَاعَةِ ‏ ‏أَفْلَحُ بْنُ أَبِي قُعَيْسٍ ‏ ‏فَذَكَرَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏وَزَادَ قُلْتُ إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يُرْضِعْنِي الرَّجُلُ قَالَ ‏ ‏تَرِبَتْ ‏ ‏يَدَاكِ أَوْ يَمِينُكِ

அபுல்குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) என் வீட்டிற்கு வந்து உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்டார். அவர் என் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவார். ஹிஜாப் சட்டம் அருளப்பட்ட பின் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அப்போது நான் அவருக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்ததும் நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது, நான் அவருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “அபூகுஐஸின் புதல்வர் அஃப்லஹ் (ரலி) என்னிடம் வந்தார். அவர் என் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவார் …” என்று இடம்பெற்றுள்ளது. மேலும், ஆயிஷா (ரலி) (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), “(அவருடைய) மனைவிதான் எனக்குப் பாலூட்டினார்; அவர் எனக்குப் பாலூட்டவில்லை. (எனவே அஃப்லஹ் அவர்களுக்கு நான் அனுமதியளிக்கமாட்டேன்)” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் இரு கைகளும் அல்லது உனது வலக் கை மண்ணைக் கவ்வட்டும்(*)” என்று கூறினார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

(*) “உன் கை / மூக்கு மண்ணைக் கவ்வட்டும்” எனபதெல்லாம் நேரடிப் பொருள் தராத, பிறரைக் கண்டிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அரபு இலக்கியச் சொற்கள்.