அத்தியாயம்: 18, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2679

‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ وَهُوَ ابْنُ أَخِي الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏قَالَ: ‏

‏طَلَّقْتُ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ فَذَكَرَ ذَلِكَ ‏ ‏عُمَرُ ‏ ‏لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَتَغَيَّظَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ قَالَ ‏ ‏مُرْهُ فَلْيُرَاجِعْهَا حَتَّى تَحِيضَ حَيْضَةً أُخْرَى مُسْتَقْبَلَةً سِوَى حَيْضَتِهَا الَّتِي طَلَّقَهَا فِيهَا فَإِنْ بَدَا لَهُ أَنْ يُطَلِّقَهَا فَلْيُطَلِّقْهَا طَاهِرًا مِنْ حَيْضَتِهَا قَبْلَ أَنْ ‏ ‏يَمَسَّهَا ‏ ‏فَذَلِكَ الطَّلَاقُ لِلْعِدَّةِ كَمَا أَمَرَ اللَّهُ


وَكَانَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏طَلَّقَهَا تَطْلِيقَةً وَاحِدَةً فَحُسِبَتْ مِنْ طَلَاقِهَا وَرَاجَعَهَا ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏كَمَا أَمَرَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

‏و حَدَّثَنِيهِ ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ عَبْدِ رَبِّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الزُّبَيْدِيُّ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَرَاجَعْتُهَا وَحَسَبْتُ لَهَا التَّطْلِيقَةَ الَّتِي طَلَّقْتُهَا

நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது தலாக் சொல்லிவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கோபப்பட்டார்கள். பிறகு (என் தந்தையிடம்,) “அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! அவளை அவர் மணவிலக்குச் செய்த மாதவிடாய் நாட்களை விடுத்து, அதற்கடுத்த மாதவிடாய்வரை (காத்திருக்கட்டும்). பிறகு அவளை மணவிலக்குச் செய்ய வேண்டுமென அவருக்குத் தோன்றினால், அவள் அந்த மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன் அவளைத் தலாக் சொல்லிக்கொள்ளட்டும்! என்று நீங்கள் உங்கள் மகனுக்குக் கட்டளையிடுங்கள். இதுவே அல்லாஹ் கட்டளையிட்டுள்ளபடி இத்தாவுக்குரிய தலாக் ஆகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்புகள் :

“(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தம் மனைவியை (அவர் மாதவிடாயிலிருந்தபோது) ஒரு தலாக் சொல்லி இருந்தார்கள். அது தலாக்காகவே கருதப்பட்டது. பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைக்கேற்ப, தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொண்டார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்களின் மகனும் இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவருமான ஸாலிம் (ரஹ்) கூறுகின்றார்.

அஸ்ஸுபைதி வழி அறிவிப்பில், “… எனவே, நான் என் மனைவியை திரும்ப அழைத்துக்கொண்டேன். நான் அவளுக்குச் சொன்ன தலாக்கை, (ஒரு) தலாக்காகவே கணித்திருந்தேன்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

Share this Hadith: