அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2713

‏حَدَّثَنَا ‏ ‏حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ ‏ ‏أَخْبَرَتْهُ: ‏

‏أَنَّهَا كَانَتْ تَحْتَ ‏ ‏أَبِي عَمْرِو بْنِ حَفْصِ بْنِ الْمُغِيرَةِ ‏ ‏فَطَلَّقَهَا آخِرَ ثَلَاثِ تَطْلِيقَاتٍ فَزَعَمَتْ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَسْتَفْتِيهِ فِي خُرُوجِهَا مِنْ بَيْتِهَا ‏ ‏فَأَمَرَهَا أَنْ تَنْتَقِلَ إِلَى ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ ‏ ‏الْأَعْمَى فَأَبَى ‏ ‏مَرْوَانُ ‏ ‏أَنْ يُصَدِّقَهُ فِي خُرُوجِ الْمُطَلَّقَةِ مِنْ بَيْتِهَا ‏


و قَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏إِنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنْكَرَتْ ذَلِكَ عَلَى ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُجَيْنٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏مَعَ قَوْلِ ‏ ‏عُرْوَةَ ‏ ‏إِنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنْكَرَتْ ذَلِكَ عَلَى ‏ ‏فَاطِمَةَ

நான் அபூஅம்ரு பின் ஹஃப்ஸு பின் அல் முஃகீரா (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை (இரு தலாக் சொல்லி திரும்ப அழைத்துக்கொண்டு) இறுதி(யாக எஞ்சியிருந்த) மூன்றாவது தலாக்கும் சொல்லிவிட்டார்.

அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, என் (கணவரின்) இல்லத்திலிருந்து வெளியேறி (வேறு இடத்தில் ‘இத்தா’ இருந்து)கொள்வது தொடர்பாகத் தீர்ப்புக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கண் தெரியாதவரான இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களது இல்லத்திற்கு மாறிக்கொள்ள உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி)


குறிப்புகள் :

“(மூன்று) தலாக் சொல்லப்பட்டுவிட்ட ஒரு பெண், தனது இல்லத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான இந்த ஹதீஸை மர்வான் பின் அல்ஹகம் நம்ப மறுத்தார்” என்று இந்த ஹதீஸை அறிவிப்பவரான அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) கூறுகின்றார்.

“ஃபாத்திமா பின்த்தி கைஸ் அவ்வாறு (வெளியேறலாம் என்று) கூறிவந்ததை, ஆயிஷா (ரலி) நிராகரித்தார்கள்” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) கூறினார்.

ஃபாத்திமா பின்த்தி கைஸ் அவ்வாறு (வெளியேறலாம் என்று) கூறிவந்ததை, ஆயிஷா (ரலி), நிராகரித்தார்கள் என்கிற உர்வா (ரஹ்) அவர்களின் குறிப்பு, உகைல் (ரஹ்) வழி அறிவிப்பிலும் இடம்பெற்றுள்ளது

Share this Hadith: