அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2719

‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أَحْمَدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمَّارُ بْنُ رُزَيْقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ مَعَ ‏ ‏الْأَسْوَدِ بْنِ يَزِيدَ ‏ ‏جَالِسًا فِي الْمَسْجِدِ الْأَعْظَمِ وَمَعَنَا ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏فَحَدَّثَ ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏بِحَدِيثِ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَجْعَلْ لَهَا سُكْنَى وَلَا نَفَقَةً ثُمَّ أَخَذَ ‏ ‏الْأَسْوَدُ ‏ ‏كَفًّا مِنْ حَصًى ‏ ‏فَحَصَبَهُ ‏ ‏بِهِ فَقَالَ وَيْلَكَ تُحَدِّثُ بِمِثْلِ هَذَا قَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏لَا نَتْرُكُ كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّنَا ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِقَوْلِ امْرَأَةٍ لَا نَدْرِي لَعَلَّهَا حَفِظَتْ أَوْ نَسِيَتْ لَهَا السُّكْنَى وَالنَّفَقَةُ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏”لَا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ “‏


و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ مُعَاذٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏أَبِي أَحْمَدَ ‏ ‏عَنْ ‏ ‏عَمَّارِ بْنِ رُزَيْقٍ ‏ ‏بِقِصَّتِهِ

நான் அஸ்வது பின் யஸீத் (ரஹ்) அவர்களுடன் (கூஃபாவின்) பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) தொடர்பான ஹதீஸை ஷஅபீ (ரஹ்) எங்களுக்கு அறிவித்தார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடம் கிடையாது; ஜீவனாம்சமும் கிடையாது” என அறிவித்தார்கள் (என்பதுதான் அந்த ஹதீஸ்). (அங்கிருந்த) அஸ்வத் (ரஹ்) ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர்மீது எறிந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: “உமக்குக் கேடுதான்! இது போன்ற செய்திகளை அறிவிக்கிறீரே? உமர் (ரலி), “ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும் நம் நபியின் வழிமுறையையும் கைவிடமாட்டோம். ஃபாத்திமா பின்த்தி கைஸ் (உண்மையிலேயே) நல்ல நினைவில் இருக்கின்றாரா, அல்லது மறந்துவிட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “பகிரங்கமான வெட்கக்கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்’  என்று (65:1) கூறியுள்ளான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்தி கைஸ் (ரலி) / ஷஅபீ (ரஹ்) வழியாக அபூஇஸ்ஹாக் அம்ரு பின் அப்தில்லாஹ் பின் உபைத் (ரஹ்)

Share this Hadith: