அத்தியாயம்: 2, பாடம்: 12, ஹதீஸ் எண்: 363

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّهُ رَأَى ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏
‏يَتَوَضَّأُ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ حَتَّى كَادَ يَبْلُغُ الْمَنْكِبَيْنِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ حَتَّى رَفَعَ إِلَى السَّاقَيْنِ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنَّ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏غُرًّا ‏ ‏مُحَجَّلِينَ ‏ ‏مِنْ أَثَرِ الْوُضُوءِ فَمَنْ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ ‏ ‏غُرَّتَهُ ‏ ‏فَلْيَفْعَلْ ‏

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவியதோடு, (கூடுதலாகக் கழுவுதலைத்) தோள்பட்டைவரை நீட்டினார்கள். பிறகு கால்களைக் கழுவியதோடு (கழுவுதலைக்) கணுக்கால்வரை உயர்த்தினார்கள். பிறகு “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மறுமை நாளில் என் சமுதாயத்தார் அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக (உளூவின்) உறுப்புகள் ஒளியுடையோராக வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவின் உறுப்புகளைக் கூடுதலாக நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக் கொள்ள முடியுமோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக நுஐம் பின் அப்தில்லாஹ் அல்முஜ்மிர் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment