அத்தியாயம்: 2, பாடம்: 12, ஹதீஸ் எண்: 366

و حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ طَارِقٍ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِىِّ بْنِ حِرَاشٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ حَوْضِي لَأَبْعَدُ مِنْ ‏ ‏أَيْلَةَ ‏ ‏مِنْ ‏ ‏عَدَنٍ ‏ ‏وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي ‏ ‏لَأَذُودُ ‏ ‏عَنْهُ الرِّجَالَ كَمَا ‏ ‏يَذُودُ ‏ ‏الرَّجُلُ الْإِبِلَ الْغَرِيبَةَ عَنْ حَوْضِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَتَعْرِفُنَا قَالَ نَعَمْ تَرِدُونَ عَلَيَّ ‏ ‏غُرًّا ‏ ‏مُحَجَّلِينَ ‏ ‏مِنْ آثَارِ الْوُضُوءِ لَيْسَتْ لِأَحَدٍ غَيْرِكُمْ ‏

“எனது (சுவனத்) தடாக(மான அல்-கவ்ஸரின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென்திசையின்) ஏடன் நகரத்திலிருந்து (வடதிசையின்) ஐலாவைவிட அதிகத் தொலைவுடையதாகும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஒருவர் தமது நீர்த் தொட்டியை விட்டு மற்றவர்களின் ஒட்டகத்தை விரட்டுவதைப் போன்று, அந்தத் தடாகத்திலிருந்து சிலரை நான் விரட்டி விடுவேன்” என்று கூறினார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; நீங்கள் அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக (உளூவின்) உறுப்புகள் ஒளிர்பவர்களாய் என்னிடம் வருவீர்கள். அந்த அடையாளம் உங்களையன்றி வேறெவருக்கும் இருக்காது.” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி).

Share this Hadith:

Leave a Comment