அத்தியாயம்: 2, பாடம்: 21, ஹதீஸ் எண்: 398

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَخَلَ ‏ ‏حَائِطًا ‏ ‏وَتَبِعَهُ ‏ ‏غُلَامٌ ‏ ‏مَعَهُ ‏ ‏مِيضَأَةٌ ‏ ‏هُوَ أَصْغَرُنَا فَوَضَعَهَا عِنْدَ سِدْرَةٍ فَقَضَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَاجَتَهُ فَخَرَجَ عَلَيْنَا وَقَدْ ‏ ‏اسْتَنْجَى ‏ ‏بِالْمَاءِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மல-ஜலம் கழிக்க) ஒரு தோட்டத்திற்குள் சென்றபோது எங்களில் வயதில் சிறியவரான ஒருவர் தம்முடன் தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, அதை ஓர் இலந்தை மரம் அருகே வைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவைகளை முடித்தபின் அந்தத் தண்ணீரால் துப்புரவு செய்து விட்டு எங்களிடம் வந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

Share this Hadith:

Leave a Comment