அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 401

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامٍ ‏ ‏قَالَ ‏
‏بَالَ ‏ ‏جَرِيرٌ ‏ ‏ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ فَقِيلَ تَفْعَلُ هَذَا فَقَالَ نَعَمْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَالَ ثُمَّ تَوَضَّأَ ‏ ‏وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ‏
‏قَالَ ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏قَالَ ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏كَانَ يُعْجِبُهُمْ هَذَا الْحَدِيثُ لِأَنَّ إِسْلَامَ ‏ ‏جَرِيرٍ ‏ ‏كَانَ بَعْدَ نُزُولِ ‏ ‏الْمَائِدَةِ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏غَيْرَ أَنَّ فِي حَدِيثِ ‏ ‏عِيسَى ‏ ‏وَسُفْيَانَ ‏ ‏قَالَ فَكَانَ أَصْحَابُ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏يُعْجِبُهُمْ هَذَا الْحَدِيثُ لِأَنَّ إِسْلَامَ ‏ ‏جَرِيرٍ ‏ ‏كَانَ بَعْدَ نُزُولِ ‏ ‏الْمَائِدَةِ ‏

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்வதை நான் பார்த்தேன். (அப்போது) அவர்கள் தம் (காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவாமல் கைகளை ஈரப்படுத்தி) காலுறைகள் மீது தடவி மஸஹுச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).

குறிப்பு:

அறிவிப்பாளர் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (இறுதியில் கால்களைக் கழுவாமல்) தம் காலுறைகள் மீது (ஈரக் கைகளால்) தடவி மஸஹுச் செய்தார்கள். அவர்களிடம் (இது குறித்து), “இவ்வாறு செய்யலாமா?” என்று கேட்கப்பட்டபோது மேற்கண்டவாறு அறிவித்ததாக ஹம்மாம் பின் அல் ஹாரிஸ் (ரஹ்) கூறினார்.

“இந்த ஹதீஸ் மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே இருந்தது. ஏனெனில், ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) 5:6ஆவது இறைவசனம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத் தழுவினார்கள்” என்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) கூறினார்.

ஈசா பின் யூனுஸ் (ரஹ்) மற்றும் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய தோழர்களுக்கு இந்த ஹதீஸ் மகிழ்ச்சியளித்தது. ஏனெனில், ஜரீர் (ரலி), அல்மாயிதா எனும் (5ஆவது) அத்தியாயம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத் தழுவினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

5:6ஆவது இறைவசனம், மஸஹுச் செய்து கொள்ள அனுமதி அளிப்பதாகும்.

Share this Hadith:

Leave a Comment