அத்தியாயம்: 2, பாடம்: 22, ஹதீஸ் எண்: 402

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ ‏
‏كُنْتُ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَانْتَهَى إِلَى سُبَاطَةِ قَوْمٍ فَبَالَ قَائِمًا فَتَنَحَّيْتُ فَقَالَ ‏ ‏ادْنُهْ فَدَنَوْتُ حَتَّى قُمْتُ عِنْدَ عَقِبَيْهِ فَتَوَضَّأَ ‏ ‏فَمَسَحَ عَلَى خُفَّيْهِ ‏

நான் நபி (ஸல்) அவர்களுடன் (சென்று கொண்டு) இருந்த போது அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்குச் சென்று நின்றவாறு சிறுநீர் கழிக்க ஆயத்தமானார்கள். நான் அவர்களை விட்டு விலகலானேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(என்னை மறைத்துக் கொண்டு) பின்பக்கம் நில்” என்று கூறினார்கள். நான் அவர்களுக்குப் பின்பக்கம் நின்று (அவர்களை மறைத்துக்) கொண்டேன். பிறகு நபியவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது தம் (கால்களைக் கழுவாமல் கைகளை ஈரப்படுத்தி) காலுறைகள் மீது தடவி மஸஹு செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி).

Share this Hadith:

Leave a Comment