حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ عَنْ أَبِيهِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ خَرَجَ لِحَاجَتِهِ فَاتَّبَعَهُ الْمُغِيرَةُ بِإِدَاوَةٍ فِيهَا مَاءٌ فَصَبَّ عَلَيْهِ حِينَ فَرَغَ مِنْ حَاجَتِهِ فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ
وَفِي رِوَايَةِ ابْنِ رُمْحٍ مَكَانَ حِينَ حَتَّى و حَدَّثَنَاه مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ ثُمَّ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காகப் புறப்பட்டுச் சென்றபோது நான் தண்ணீர் குவளையுடன் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்துத் திரும்பியபின் நான் தண்ணீரை ஊற்ற, அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (இறுதியாக, கால்களைத் தண்ணீரால் கழுவாமல் கைகளை ஈரப்படுத்தி) தம் காலுறைகள் மீது தடவி மஸஹுச் செய்தார்கள்.
அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி).
குறிப்பு:
இந்த ஹதீஸின் முஹம்மதிப்னில் முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் (தண்ணீரால்) கழுவினார்கள். மேலும், (கைகளை ஈரப்படுத்தி) தமது தலையில் தடவி மஸஹுச் செய்தார்கள். பின்னர் தம் காலுறைகள் மீது மஸஹுச் செய்தார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.