அத்தியாயம்: 2, பாடம்: 23, ஹதீஸ் எண்: 410

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُمَيْدٌ الطَّوِيلُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُزَنِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏
‏تَخَلَّفَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَخَلَّفْتُ مَعَهُ فَلَمَّا قَضَى حَاجَتَهُ قَالَ ‏ ‏أَمَعَكَ مَاءٌ فَأَتَيْتُهُ ‏ ‏بِمِطْهَرَةٍ ‏ ‏فَغَسَلَ كَفَّيْهِ وَوَجْهَهُ ثُمَّ ذَهَبَ ‏ ‏يَحْسِرُ ‏ ‏عَنْ ذِرَاعَيْهِ فَضَاقَ كُمُّ ‏ ‏الْجُبَّةِ ‏ ‏فَأَخْرَجَ يَدَهُ مِنْ تَحْتِ ‏ ‏الْجُبَّةِ ‏ ‏وَأَلْقَى ‏ ‏الْجُبَّةَ ‏ ‏عَلَى مَنْكِبَيْهِ وَغَسَلَ ذِرَاعَيْهِ وَمَسَحَ ‏ ‏بِنَاصِيَتِهِ ‏ ‏وَعَلَى الْعِمَامَةِ وَعَلَى خُفَّيْهِ ثُمَّ رَكِبَ وَرَكِبْتُ فَانْتَهَيْنَا إِلَى الْقَوْمِ وَقَدْ قَامُوا فِي الصَّلَاةِ ‏ ‏يُصَلِّي بِهِمْ ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ‏ ‏وَقَدْ رَكَعَ بِهِمْ رَكْعَةً فَلَمَّا أَحَسَّ بِالنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَهَبَ يَتَأَخَّرُ ‏ ‏فَأَوْمَأَ ‏ ‏إِلَيْهِ فَصَلَّى بِهِمْ فَلَمَّا سَلَّمَ قَامَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقُمْتُ فَرَكَعْنَا الرَّكْعَةَ الَّتِي سَبَقَتْنَا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு குழுப் பயணத்தில்) அனைவருக்கும் பின்னால் (தாமதமாக) வந்து கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் வந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (வாகனத்திலிருந்து இறங்கி) இயற்கைத் தேவையை முடித்துக் கொண்டு வந்து, “உம்மிடம் தண்ணீர் உள்ளதா?” என்று கேட்டார்கள். நான் தண்ணீர் குவளையை அவர்களிடம் எடுத்துச் சென்றேன். அவர்கள் தம்முடைய முன் கைகளையும் முகத்தையும் கழுவினார்கள். பிறகு தமது முழங்கையை வெளியே எடுக்கப் போனபோது சட்டைக் கை குறுகலாக இருக்கவே, தமது கையை (அவர்கள் அணிந்திருந்த) நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்தார்கள். நீளங்கியைத் தோளில் போட்டுக் கொண்டார்கள். பிறகு தமது முழங்கை வரைக் கழுவினார்கள். பிறகு (கைகளின் ஈரத்தால்) தமது முன் தலையின் மீதும் தலைப்பாகை மீதும் காலுறைகள் மீதும் தடவி மஸஹுச் செய்து கொண்டார்கள். பிறகு வாகனத்தில் ஏறினார்கள். நானும் ஏறிக் கொண்டேன். நாங்கள் (எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த எங்கள்) குழுவினரிடம் வந்து சேர்ந்தோம். அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்( ரலி) அவர்கள் (இமாமாகத்) தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு ரக்அத் தொழுது முடித்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டதை உணர்ந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் பின்வாங்கப் பார்த்தார்கள். அப்போது, நபி (ஸல்), அவர்களை (அங்கேயே நின்று தொழுமாறு) சைகை செய்தார்கள். எனவே, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (எஞ்சிய ரக்அத்களையும்) மக்களுக்குத் தொழுவித்தார்கள். அவர் ஸலாம் கொடுத்ததும் நபிஅ(ஸல்) அவர்களும் நானும் எழுந்து எங்களுக்கு விடுபட்டுப் போயிருந்த ஒரு ரக்அத்தைத் தொழுதோம்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி).

Share this Hadith:

Leave a Comment