அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 339

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏جَامِعِ بْنِ شَدَّادٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏حُمْرَانَ بْنَ أَبَانَ ‏ ‏يُحَدِّثُ ‏ ‏أَبَا بُرْدَةَ ‏ ‏فِي هَذَا الْمَسْجِدِ فِي إِمَارَةِ ‏ ‏بِشْرٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَتَمَّ الْوُضُوءَ كَمَا أَمَرَهُ اللَّهُ تَعَالَى فَالصَّلَوَاتُ الْمَكْتُوبَاتُ كَفَّارَاتٌ لِمَا بَيْنَهُنَّ ‏
‏هَذَا حَدِيثُ ‏ ‏ابْنِ مُعَاذٍ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏غُنْدَرٍ ‏ ‏فِي إِمَارَةِ ‏ ‏بِشْرٍ ‏ ‏وَلَا ذِكْرُ الْمَكْتُوبَاتِ ‏

“அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப முழுமையாக அங்கத் தூய்மை செய்பவர் தொழுகின்ற கடமையாக்கப்பட்ட தொழுகைகள் (ஒவ்வொன்றும்) அவற்றுக்கு இடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி).

குறிப்பு:

“பிஷ்ர் பின் மர்வான் பின் அல்ஹகமுடைய ஆட்சிக் காலத்தில் ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் இந்த (பஸ்ரா) பள்ளிவாசலில் வைத்து அபூபுர்தா (ரஹ்) அவர்களிடம் (மேற்கண்டவாறு) அறிவிப்பதை நான் செய்வியுற்றேன்” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஜாமிஉ பின் ஷத்தாத் (ரஹ்) குறிப்பிடுகிறார். உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) வழி அறிவிப்பிலும் இவ்வாறே குறிப்பிடப் படுகிறது. ஆனால், ஃகுந்தர் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில் “பிஷ்ர் பின் மர்வான் ஆட்சிக்காலத்தில்” என்பதும் “கடமையாக்கப்பட்ட” என்ற சொல்லும் குறுப்பிடப் படவில்லை.

Share this Hadith:

Leave a Comment