அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2848

‏حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ مَعِينٍ ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَحُسَيْنُ بْنُ عِيسَى ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْمُزَابَنَةِ وَالْمُزَابَنَةُ بَيْعُ ثَمَرِ النَّخْلِ بِالتَّمْرِ كَيْلًا وَبَيْعُ الزَّبِيبِ بِالْعِنَبِ كَيْلًا وَعَنْ كُلِّ ثَمَرٍ ‏ ‏بِخَرْصِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ’முஸாபனா’ எனும் வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். ‘முஸாபனா’ என்பது, (பேரீச்ச மரத்திலுள்ள) செங்கனிகளை, அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதும், (கொடியிலுள்ள) திராட்சைப் பழங்களை, அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைப் பழங்களுக்குப் பதிலாக விற்பதும், மரத்திலுள்ள எந்தக் கனியையும் தோராயமாகக் கணக்கிட்டு விற்பதும் ஆகும்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

Share this Hadith: