و حَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ:
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ فَضْلُ أَرْضٍ فَلْيَزْرَعْهَا أَوْ لِيُزْرِعْهَا أَخَاهُ وَلَا تَبِيعُوهَا
فَقُلْتُ لِسَعِيدٍ مَا قَوْلُهُ وَلَا تَبِيعُوهَا يَعْنِي الْكِرَاءَ قَالَ نَعَمْ
“தமது தேவை போக எஞ்சிய நிலத்தை வைத்திருப்பவர், அதை விளைவிக்கட்டும்; அல்லது தம் (முஸ்லிம்) சகோதரருக்கு விளைவிக்கக் கொடுத்துவிடட்டும்! அதை விற்றுவிட வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
குறிப்பு :
நான் ஸயீத் பின் மீனா (ரஹ்) அவர்களிடம், “அதை விற்றுவிட வேண்டாம் என்பதன் பொருள் குத்தகைக்குவிட வேண்டாம் என்பதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸலீம் பின் ஹய்யான் (ரஹ்) கூறுகின்றார்.