அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2884

‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ: ‏ ‏

أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏كَانَ يُكْرِي أَرَضِيهِ حَتَّى بَلَغَهُ ‏ ‏أَنَّ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ الْأَنْصَارِيَّ ‏ ‏كَانَ يَنْهَى عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ فَلَقِيَهُ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏ابْنَ خَدِيجٍ ‏ ‏مَاذَا تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ ‏
‏قَالَ ‏ ‏رَافِعُ بْنُ خَدِيجٍ ‏ ‏لِعَبْدِ اللَّهِ ‏ ‏سَمِعْتُ ‏ ‏عَمَّيَّ ‏ ‏وَكَانَا قَدْ شَهِدَا ‏ ‏بَدْرًا ‏ ‏يُحَدِّثَانِ أَهْلَ الدَّارِ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏لَقَدْ كُنْتُ أَعْلَمُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّ الْأَرْضَ ‏ ‏تُكْرَى ‏
‏ثُمَّ خَشِيَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَنْ يَكُونَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحْدَثَ فِي ذَلِكَ شَيْئًا لَمْ يَكُنْ عَلِمَهُ فَتَرَكَ ‏ ‏كِرَاءَ ‏ ‏الْأَرْضِ

தம் நிலங்களை (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) குத்தகைக்கு விட்டுவந்தார்கள். இந்நிலையில், ராஃபிஉ பின் கதீஜ் அல்அன்ஸாரீ (ரலி) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்துவருகிறார்கள் எனும் செய்தி என் தந்தைக்கு எட்டியது.

உடனே என் தந்தை, ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களைச் சந்தித்து, “இப்னு கதீஜ்! நிலக் குத்தகை விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகத் தாங்கள் என்ன அறிவித்துவருகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)  “என் தந்தையின் இரு சகோதரர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்கள் ஆவர் அவ்விருவரும் (தம்) குடும்பத்தாரிடம் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்’ எனக் கூறிவந்ததை நான் செவியுற்றேன்” என்றார்கள். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு வந்ததை நான் அறிந்திருந்தேன்” என்று என் தந்தை கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அது கூடாது என்று) புதிய சட்டம் பிறப்பித்து, (ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதைக் கேட்கும்வரை) நிலக் குத்தகை தொடர்பாக நாம் அறியாமல் இருந்துவிட்டோமோ என்று அஞ்சி, நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை என் தந்தை நிறுத்திவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) வழியாக ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

Share this Hadith: