حَدَّثَنِي إِسْحَقُ بْنُ مَنْصُورٍ أَخْبَرَنَا أَبُو مُسْهِرٍ حَدَّثَنِي يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنِي أَبُو عَمْرٍو الْأَوْزَاعِيُّ عَنْ أَبِي النَّجَاشِيِّ مَوْلَى رَافِعِ بْنِ خَدِيجٍ عَنْ رَافِعٍ أَنَّ ظُهَيْرَ بْنَ رَافِعٍ وَهُوَ عَمُّهُ قَالَ:
أَتَانِي ظُهَيْرٌ فَقَالَ لَقَدْ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَمْرٍ كَانَ بِنَا رَافِقًا فَقُلْتُ وَمَا ذَاكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ حَقٌّ قَالَ سَأَلَنِي كَيْفَ تَصْنَعُونَ بِمَحَاقِلِكُمْ فَقُلْتُ نُؤَاجِرُهَا يَا رَسُولَ اللَّهِ عَلَى الرَّبِيعِ أَوْ الْأَوْسُقِ مِنْ التَّمْرِ أَوْ الشَّعِيرِ قَالَ فَلَا تَفْعَلُوا ازْرَعُوهَا أَوْ أَزْرِعُوهَا أَوْ أَمْسِكُوهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ عَنْ أَبِي النَّجَاشِيِّ عَنْ رَافِعٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا وَلَمْ يَذْكُرْ عَنْ عَمِّهِ ظُهَيْرٍ
ழுஹைர் பின் ராஃபிஉ (ரலி) (என் தந்தையின் சகோதரர் ஆவார். அவர்) என்னிடம் வந்து, “எங்களுக்கு உறுதுணையாக இருந்த ஒன்றைச் செய்யக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று கூறினார். நான், “அது என்ன? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னால் அது சத்தியமானதே” என்று கூறினேன்.
அதற்கு அவர் சென்னார்: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் உங்கள் விளை நிலங்களை என்ன செய்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். “வாய்க்காலை ஒட்டிய பகுதியில் விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்; அல்லது பேரீச்சம் பழத்திலிருந்தோ கோதுமையிலிருந்தோ குறிப்பிட்ட அளவை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் அவற்றைக் குத்தகைக்கு விடுகின்றோம்” என்று நான் பதிலளித்தேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறு செய்யாதீர்கள். நீங்களே விளைவியுங்கள்; அல்லது பிறரிடம் (கைமாறு பெறாமல்) விளைவிக்கக் கொடுத்துவிடுங்கள்; அல்லது விளைவிக்காமல் அப்படியே விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)
குறிப்பு :
இக்ரிமா பின் அம்மார் (ரஹ்) வழி அறிவிப்பில், “ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), நேரடியாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தாக இடம்பெற்றுள்ளது; அவர் தம் தந்தையின் சகோதரர் ழுஹைர் (ரலி) கூறினார்கள் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.