அத்தியாயம்: 21, பாடம்: 19, ஹதீஸ் எண்: 2889

‏حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏حَنْظَلَةَ الزُّرَقِيِّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ ‏ ‏يَقُولُ: ‏
كُنَّا أَكْثَرَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏حَقْلًا قَالَ ‏ ‏كُنَّا ‏ ‏نُكْرِي ‏ ‏الْأَرْضَ عَلَى أَنَّ لَنَا هَذِهِ وَلَهُمْ هَذِهِ فَرُبَّمَا أَخْرَجَتْ هَذِهِ وَلَمْ تُخْرِجْ هَذِهِ فَنَهَانَا عَنْ ذَلِكَ وَأَمَّا ‏ ‏الْوَرِقُ ‏ ‏فَلَمْ يَنْهَنَا ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

அன்ஸாரிகளிலேயே நாங்கள்தாம் விளைநிலம் அதிகம் உடையவர்களாக இருந்தோம். நாங்கள் விளைநிலத்தில் இ(ந்தப் பகுதியில் விளைவ)து எங்களுக்குரியது; அ(ந்தப் பகுதியில் விளைவ)து அவர்களுக்குரியது என நிபந்தனையிட்டு நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவந்தோம். சில வேளைகளில் இந்தப் பகுதி (நல்ல) விளைச்சலைத் தரும்; அந்தப் பகுதி விளைச்சலைத் தராது. இவ்விதம் நிபந்தனையிட்டு குத்தகைக்கு விடவேண்டாம் என்று நபி (ஸல்) எங்களைத் தடுத்தார்கள். வெள்ளிக்(காசுகளுக்)கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை அவர்கள் தடை செய்யவில்லை.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)

Share this Hadith: