அத்தியாயம்: 21, பாடம்: 20, ஹதீஸ் எண்: 2891

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَمَّادٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ ‏ ‏قَالَ ‏ ‏دَخَلْنَا عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَعْقِلٍ ‏ ‏فَسَأَلْنَاهُ عَنْ ‏ ‏الْمُزَارَعَةِ ‏ ‏فَقَالَ زَعَمَ ‏ ‏ثَابِتٌ: ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُزَارَعَةِ ‏ ‏وَأَمَرَ بِالْمُؤَاجَرَةِ وَقَالَ لَا بَأْسَ بِهَا

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்களிடம் சென்று விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவது (முஸாரஆ) பற்றிக் கேட்டோம். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள். பணத்திற்குப் பதிலாக நிலத்தை வாடகைக்கு விடுமாறு (முஆஜரா) உத்தரவிட்டார்கள். மேலும் அதனால் குற்றமில்லை என்றும் கூறினார்கள்” என்று ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) உறுதிப்படுத்தினார்கள் என்பதாக அப்துல்லாஹ் பின் ம அகில் (ரஹ்) பதிலளித்தார்கள்..

அறிவிப்பாளர் : ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரஹ்)

Share this Hadith: