அத்தியாயம்: 22, பாடம்: 11, ஹதீஸ் எண்: 2953

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏يَقُولُ: ‏
دَعَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غُلَامًا ‏ ‏لَنَا ‏ ‏حَجَّامًا ‏ ‏فَحَجَمَهُ ‏ ‏فَأَمَرَ لَهُ ‏ ‏بِصَاعٍ ‏ ‏أَوْ ‏ ‏مُدٍّ ‏ ‏أَوْ ‏ ‏مُدَّيْنِ ‏ ‏وَكَلَّمَ فِيهِ فَخُفِّفَ عَنْ ضَرِيبَتِهِ

நபி (ஸல்) குருதி உறிஞ்சி எடுக்கும் எங்கள் அடிமை (ஊழியர்) ஒருவரை அழைத்து வரச் செய்து, தமக்குக் குருதி உறிஞ்சி எடுக்கச் செய்தார்கள். அவருக்கு ஒரு ‘ஸாஉ’ அல்லது ஒரு ‘முத்’ அல்லது இரண்டு ‘முத்’ (அளவுக்கு உணவுப் பொருட்களை ஊதியமாகக்) கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள்; அவர் சம்பந்தமாக (அவருடைய உரிமையாளர்களிடம்) பேசினார்கள். அதையடுத்து அவர் செலுத்த வேண்டியிருந்த வரி குறைக்கப்பட்டது.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith: