அத்தியாயம்: 22, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2977

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبَّادُ بْنُ الْعَوَّامِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَبِي إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْفِضَّةِ بِالْفِضَّةِ وَالذَّهَبِ بِالذَّهَبِ إِلَّا سَوَاءً بِسَوَاءٍ وَأَمَرَنَا أَنْ نَشْتَرِيَ الْفِضَّةَ بِالذَّهَبِ كَيْفَ شِئْنَا وَنَشْتَرِيَ الذَّهَبَ بِالْفِضَّةِ كَيْفَ شِئْنَا قَالَ فَسَأَلَهُ رَجُلٌ فَقَالَ يَدًا بِيَدٍ فَقَالَ هَكَذَا سَمِعْتُ ‏


حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ صَالِحٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي إِسْحَقَ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرَةَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏أَبَا بَكْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏نَهَانَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெள்ளிக்கு வெள்ளியை, தங்கத்திற்குத் தங்கத்தைச் சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்) விற்கக் கூடாது எனத் தடை விதித்தார்கள். தங்கத்திற்கு வெள்ளியை நாங்கள் விரும்பியவாறு வாங்குவதற்கும், வெள்ளிக்குத் தங்கத்தை நாங்கள் விரும்பியவாறு வாங்குவதற்கும் அனுமதித்தார்கள்.

இந்த ஹதீஸை அபூபக்ரா (ரலி) அறிவித்தபோது ஒருவர் (குறுக்கிட்டு), “உடனுக்குடன் (மாற்றிக்கொண்டால்தானே)!” என்று கேட்டார். அதற்கு அபூபக்ரா (ரலி), “ஆம், அவ்வாறுதான் நான் செவியுற்றேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூபக்ரா (ரலி)


குறிப்பு :

யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) வழி அறிவிப்பில் (பொதுவாக இல்லாமல்), “….. எங்களுக்குத் தடை விதித்தார்கள்” எனக் குறிப்பாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 22, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2976

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا الْمِنْهَالِ ‏ ‏يَقُولُ سَأَلْتُ ‏ ‏الْبَرَاءَ بْنَ عَازِبٍ ‏ ‏عَنْ الصَّرْفِ ‏ ‏فَقَالَ: ‏
سَلْ ‏ ‏زَيْدَ بْنَ أَرْقَمَ ‏ ‏فَهُوَ أَعْلَمُ فَسَأَلْتُ ‏ ‏زَيْدًا ‏ ‏فَقَالَ سَلْ ‏ ‏الْبَرَاءَ ‏ ‏فَإِنَّهُ أَعْلَمُ ثُمَّ قَالَا ‏ ‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ بَيْعِ ‏ ‏الْوَرِقِ ‏ ‏بِالذَّهَبِ دَيْنًا

நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் குறித்துக் கேட்டேன். அவர்கள், “நீர் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேளும். அவர் (என்னைவிட) நன்கு அறிந்தவர்” என்றார்கள். அவ்வாறே நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள், “நீர் பராஉ (ரலி) அவர்களிடமே கேளும். அவரே (என்னைவிட) நன்கு அறிந்தவர்” என்றார்கள். பின்னர் இருவரும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை விதித்தார்கள்” என்று கூறினர்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அபுல் மின்ஹால் அப்துர் ரஹ்மான் பின் முத்இம் (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2975

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمِنْهَالِ ‏ ‏قَالَ: ‏
بَاعَ شَرِيكٌ لِي ‏ ‏وَرِقًا ‏ ‏بِنَسِيئَةٍ ‏ ‏إِلَى الْمَوْسِمِ أَوْ إِلَى الْحَجِّ فَجَاءَ إِلَيَّ فَأَخْبَرَنِي فَقُلْتُ هَذَا أَمْرٌ لَا يَصْلُحُ قَالَ قَدْ بِعْتُهُ فِي السُّوقِ فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ أَحَدٌ فَأَتَيْتُ ‏ ‏الْبَرَاءَ بْنَ عَازِبٍ ‏ ‏فَسَأَلْتُهُ فَقَالَ قَدِمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَنَحْنُ نَبِيعُ هَذَا الْبَيْعَ فَقَالَ ‏ ‏مَا كَانَ يَدًا بِيَدٍ فَلَا بَأْسَ بِهِ وَمَا كَانَ ‏ ‏نَسِيئَةً ‏ ‏فَهُوَ رِبًا ‏ ‏وَائْتِ ‏ ‏زَيْدَ بْنَ أَرْقَمَ ‏ ‏فَإِنَّهُ أَعْظَمُ تِجَارَةً مِنِّي فَأَتَيْتُهُ فَسَأَلْتُهُ فَقَالَ مِثْلَ ذَلِكَ

என் கூட்டாளி ஒருவர், (தங்கத்திற்கு) வெள்ளியை ஹஜ் பருவம்வரை கடனுக்கு (நாணயமாற்று முறையில்) விற்றார். பின்னர் என்னிடம் வந்து அதைப் பற்றித் தெரிவித்தார். நான், “இது முறையாகாது” என்றேன். அவர், “அவ்வாறாயின் நான் கடைத் தெருவில் அதை விற்றபோது என்னிடம் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை” என்று சொன்னார். ஆகவே, நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றி (விளக்கம்) கேட்டேன்.

அதற்கு அவர்கள், “நபி (ஸல்) மதீனாவுக்கு (ப் புலம் பெயர்ந்து) வந்தபோது, நாங்கள் இதே வியாபாரத்தைச் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘உடனுக்குடன் (நாணயமாற்று) செய்துகொண்டால் குற்றமில்லை; (தங்கத்தை வெள்ளிக்கோ, வெள்ளியைத் தங்கத்திற்கோ) கடனாக மாற்றினால்தான் அது வட்டியாகும்’ என்று கூறினார்கள். நீர் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் போ(ய் விசாரி)! ஏனெனில், அவர் என்னைவிட பெரிய வணிகர் ஆவார்” என்றார்கள். அவ்வாறே நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்று கேட்டபோது, பராஉ (ரலி) கூறியதைப் போன்றே அவர்களும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அபுல் மின்ஹால் அப்துர் ரஹ்மான் பின் முத்இம் (ரஹ்)