அத்தியாயம்: 24, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3045

حَدَّثَنِي أُمَيَّةُ بْنُ بِسْطَامَ، حَدَّثَنَا يَزِيدُ – يَعْنِي ابْنَ زُرَيْعٍ – حَدَّثَنَا رَوْحٌ – وَهُوَ ابْنُ الْقَاسِمِ – عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ:‏

أَنَّهُ حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ فَوَجَدَهُ عِنْدَ صَاحِبِهِ وَقَدْ أَضَاعَهُ وَكَانَ قَلِيلَ الْمَالِ فَأَرَادَ أَنْ يَشْتَرِيَهُ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ ‏ “‏ لاَ تَشْتَرِهِ وَإِنْ أُعْطِيتَهُ بِدِرْهَمٍ فَإِنَّ مَثَلَ الْعَائِدِ فِي صَدَقَتِهِ كَمَثَلِ الْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ ‏”‏


وَحَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّ مَالِكٍ وَرَوْحٍ أَتَمُّ وَأَكْثَرُ ‏

உமர் (ரலி), அல்லாஹ்வின் பாதையில் (பயணம் செல்ல) ஒருவரைக் குதிரையொன்றில் ஏற்றி (அதை அவருக்குத் தானமாகக் கொடுத்து) அனுப்பினார்கள். அந்தக் குதிரை அவரிடம் (சரியாகப் பராமரிக்கப்படாததால்) நலிந்துவிட்டிருப்பதைக் கண்டார்கள். அவர் வசதி குறைந்த (ஏழை) மனிதராக இருந்தார். ஆகவே, அவரிடமிருந்து அதைத் தாமே விலைக்கு வாங்கிக்கொள்ள உமர் (ரலி) விரும்பினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அது குறித்துக் கேட்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதை விலைக்கு வாங்காதீர். அதை ஒரு வெள்ளிக் காசுக்கு அவர் உமக்குத் தந்தாலும் சரியே! வழங்கிய தனது தானத்தைத் திரும்பப் பெற்றவனின் நிலை, தான் எடுத்த வாந்தியைத் தானே தின்னும் நாயின் நிலையை ஒத்திருக்கிறது ” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி) வழியாக அஸ்லம் (ரஹ்)

Share this Hadith: