அத்தியாயம்: 24, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3054

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ حَدَّثَنَا النُّعْمَانُ بْنُ بَشِيرٍ قَالَ :‏

وَقَدْ أَعْطَاهُ أَبُوهُ غُلاَمًا فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ مَا هَذَا الْغُلاَمُ ‏”‏ ‏.‏ قَالَ أَعْطَانِيهِ أَبِي ‏.‏ قَالَ ‏”‏ فَكُلَّ إِخْوَتِهِ أَعْطَيْتَهُ كَمَا أَعْطَيْتَ هَذَا ‏”‏ ‏‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏”‏ فَرُدَّهُ ‏”‏ ‏

என் தந்தை (சிறுவனாக இருந்த) எனக்கு ஓர் அடிமையை (அன்பளிப்பாக) வழங்கியிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) என் தந்தையிடம், “யார் இந்த அடிமை?” என்று கேட்டார்கள். அதற்கு “என் தந்தை எனக்கு அன்பளிப்பாக வழங்கியவர்” என்று (குறுக்கிட்டு) நான் சொன்னேன். நபி (ஸல்), “இவருடைய சகோதரர்கள் அனைவருக்கும் இவருக்கு வழங்கியதைப் போன்று வழங்கினீரா?” என்று (என் தந்தையிடம்) கேட்டார்கள். என் தந்தை “இல்லை” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின், அந்த அடிமையைத் திரும்பப் பெற்றுக் கொள்வீராக!” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)

Share this Hadith: