அத்தியாயம்: 24, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3060

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ، حَدَّثَنَا أَزْهَرُ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ:‏

نَحَلَنِي أَبِي نُحْلاً ثُمَّ أَتَى بِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِيُشْهِدَهُ فَقَالَ ‏”‏ أَكُلَّ وَلَدِكَ أَعْطَيْتَهُ هَذَا ‏”‏ ‏‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏”‏ أَلَيْسَ تُرِيدُ مِنْهُمُ الْبِرَّ مِثْلَ مَا تُرِيدُ مِنْ ذَا ‏”‏ ‏ قَالَ بَلَى ‏.‏ قَالَ ‏”‏ فَإِنِّي لاَ أَشْهَدُ ‏”‏


قَالَ ابْنُ عَوْنٍ فَحَدَّثْتُ بِهِ مُحَمَّدًا فَقَالَ إِنَّمَا تَحَدَّثْنَا أَنَّهُ قَالَ ‏”‏ قَارِبُوا بَيْنَ أَوْلاَدِكُمْ ‏”‏ ‏.‏

என் தந்தை எனக்கு ஓர் அன்பளிப்புப் பொருளை வழங்கினார்கள். பிறகு அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குவதற்காக என்னை அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உம்முடைய பிள்ளைகள் அனைவருக்கும் இதை வழங்கினீரா?” என்று கேட்டார்கள். என் தந்தை “இல்லை” என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவரிடமிருந்து நீர் நன்மையை எதிர்பார்ப்பதைப் போன்று அவர்கள் அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கின்றீரா இல்லையா?” என்று கேட்டார்கள். என் தந்தை “ஆம் (எதிர் பார்க்கிறேன்)” என்றார்கள். “அவ்வாறாயின், நான் (இதற்குச்) சாட்சியாக இருக்கமாட்டேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அவ்னு (ரஹ்) கூறுகின்றார்:

இதை நான் முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது, “உங்கள் பிள்ளைகளை (இயன்றவரை)ச் சமமாக நடத்துங்கள்” என நபி (ஸல்) கூறினார்கள் என்றே நாம் அறிவித்துவருகிறோம் என்றார்கள்.

Share this Hadith: