அத்தியாயம்: 24, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3061

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ :‏

قَالَتِ امْرَأَةُ بَشِيرٍ انْحَلِ ابْنِي غُلاَمَكَ وَأَشْهِدْ لِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ ابْنَةَ فُلاَنٍ سَأَلَتْنِي أَنْ أَنْحَلَ ابْنَهَا غُلاَمِي وَقَالَتْ أَشْهِدْ لِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ أَلَهُ إِخْوَةٌ ‏”‏ ‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏”‏ أَفَكُلَّهُمْ أَعْطَيْتَ مِثْلَ مَا أَعْطَيْتَهُ ‏”‏ ‏‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏”‏ فَلَيْسَ يَصْلُحُ هَذَا ‏ وَإِنِّي لاَ أَشْهَدُ إِلاَّ عَلَى حَقٍّ ‏”‏

பஷீர் பின் ஸஅத் (ரலி) அவர்களின் துணைவியார் பஷீர் (ரலி) அவர்களிடம், “என்னுடைய இந்த மக(நுஅமா)னுக்கு உங்களுடைய அடிமையை அன்பளிப்பாக வழங்கிவிடுங்கள்” என்று கூறிவிட்டு, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குங்கள்” என்றார். அவ்வாறே பஷீர் பின் ஸஅத் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, இன்ன மனிதரின் (ரவாஹாவின்) மகள், தன் மகனுக்கு என்னுடைய அடிமையை அன்பளிப்பாக வழங்குமாறு என்னிடம் கேட்டுவிட்டு, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்கும்படி கூறுகிறாள்” என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அ(வளுடைய புதல்)வருக்குச் சகோதரர்கள் இருக்கின்றார்களா?” என்று கேட்டார்கள். பஷீர் “ஆம்” என்றார்கள். “இவருக்கு அன்பளிப்புச் செய்ததைப் போன்று அவர்கள் அனைவருக்கும் அன்பளிப்புச் செய்தீரா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள். பஷீர் “இல்லை” என்றார்கள். “இது தகாத செயலாகும். நான் நியாயத்திற்கு மட்டுமே சாட்சியாக இருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறிவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

Share this Hadith: