அத்தியாயம்: 24, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3064

حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنِ الْعُمْرَى، وَسُنَّتِهَا، عَنْ حَدِيثِ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ أَخْبَرَهُ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ أَيُّمَا رَجُلٍ أَعْمَرَ رَجُلاً عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَقَالَ قَدْ أَعْطَيْتُكَهَا وَعَقِبَكَ مَا بَقِيَ مِنْكُمْ أَحَدٌ ‏.‏ فَإِنَّهَا لِمَنْ أُعْطِيَهَا وَإِنَّهَا لاَ تَرْجِعُ إِلَى صَاحِبِهَا مِنْ أَجْلِ أَنَّهُ أَعْطَى عَطَاءً وَقَعَتْ فِيهِ الْمَوَارِيثُ ‏”‏

“ஒருவர் மற்றொருவருக்கு ஆயுட் கால அன்பளிப்பு வழங்கினால், அது அன்பளிப்பு வழங்கப்பட்டவருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும். அவர், நான் இ(ந்தச் சொத்)தை உமக்கும் உம்முடைய சந்ததிகளுக்கும், உங்களில் ஒருவர் உயிரோடிருக்கும்வரை வழங்கிவிட்டேன் என்று கூறி அன்பளிப்பாக வழங்கினாலும் அது அன்பளிப்பு வழங்கப்பட்டவருக்கே உரியதாகும். அது வழங்கியவரிடம் திரும்பாது. காரணம், (வழங்கப்பட்டவரின் இறப்பிற்குப் பின் இறந்தவருடைய) வாரிசுகளுக்குப் போய்ச் சேரும் வகையிலேயே அவர் அன்பளிப்பு வழங்கியுள்ளார்“ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith: