அத்தியாயம்: 24, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3066

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرٍ – وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى فِيمَنْ أُعْمِرَ عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَهِيَ لَهُ بَتْلَةً لاَ يَجُوزُ لِلْمُعْطِي فِيهَا شَرْطٌ وَلاَ ثُنْيَا ‏.‏


قَالَ أَبُو سَلَمَةَ لأَنَّهُ أَعْطَى عَطَاءً وَقَعَتْ فِيهِ الْمَوَارِيثُ فَقَطَعَتِ الْمَوَارِيثُ شَرْطَهُ

“இது உனக்கும் உன் சந்ததிக்கும் ஆயுட் கால அன்பளிப்பாகும்” என்று கூறி அன்பளிப்பு வழங்கப்பட்ட ஒரு செல்வத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது அன்பளிப்பு வழங்கப்பட்டவருக்கு (முற்றாக) உரியதாகிவிடும். அதில் நிபந்தனை விதிப்பதற்கோ விதிவிலக்குப் பெறுவதற்கோ அன்பளிப்பு வழங்கியவருக்கு அனுமதி கிடையாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

“ஏனெனில், (அன்பளிப்பு வழங்கப்பட்டவரின் இறப்புக்குப் பின்) அவருடைய வாரிசுகளுக்குப் போய்ச்சேரும் வகையிலேயே அன்பளிப்பு வழங்கியுள்ளார். அந்த வாரிசுரிமை அவரது (திரும்பப் பெறும்) நிபந்தனையைத் துண்டித்துவிட்டது” என்று அபூஸலமா (ரஹ்) கூறினார்கள்.

Share this Hadith: