அத்தியாயம்: 25, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3076

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ حَدَّثَنِي مُصْعَبُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ قَالَ:‏ ‏

مَرِضْتُ فَأَرْسَلْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ دَعْنِي أَقْسِمْ مَالِي حَيْثُ شِئْتُ فَأَبَى ‏.‏ قُلْتُ فَالنِّصْفُ فَأَبَى ‏.‏ قُلْتُ فَالثُّلُثُ قَالَ فَسَكَتَ بَعْدَ الثُّلُثِ ‏.‏ قَالَ فَكَانَ بَعْدُ الثُّلُثُ جَائِزًا ‏


وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏.‏ وَلَمْ يَذْكُرْ فَكَانَ بَعْدُ الثُّلُثُ جَائِزًا ‏‏

நான் உடல் நலிவுற்றிருந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு ஆளனுப்பினேன். (அவர்கள் வந்தபோது,) “நான் விரும்பிய முறையில் என் செல்வத்தைப் பங்கிட்டுக் கொடுக்க என்னை அனுமதியுங்கள்” என்று கேட்டேன். நபி (ஸல்) அதற்கு மறுத்துவிட்டார்கள். “அவ்வாறாயின் பாதியாவது (அறவழியில் செலவிட அனுமதியுங்கள்)” என்று கேட்டேன். அதற்கும் மறுப்புத் தெரிவித்தார்கள். நான் “(என் செல்வத்தில்) மூன்றில் ஒரு பாகத்தை (தர்மம் செய்ய அனுமதியுங்கள்)” என்று கேட்டபோது அமைதியாக இருந்தார்கள். இதன் பின்னரே மூன்றில் ஒரு பாகம் (மரண சாஸனம் செய்வதற்கு) அனுமதிக்கப்பட்டது என்றாயிற்று.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)


குறிப்பு :

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில், “இதன் பின்னரே மூன்றில் ஒரு பாகம் (மரண சாஸனம் செய்வதற்கு) அனுமதிக்கப்பட்டது என்றாயிற்று” எனும் குறிப்பு இடம் பெறவில்லை.

Share this Hadith: