அத்தியாயம்: 27, பாடம்: 13, ஹதீஸ் எண்: 3154

حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ حَدَّثَنَا حَمَّادٌ – يَعْنِي ابْنَ زَيْدٍ – عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ :‏ 

أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ أَعْتَقَ غُلاَمًا لَهُ عَنْ دُبُرٍ لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏ مَنْ يَشْتَرِيهِ مِنِّي ‏”‏ ‏.‏ فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ بِثَمَانِمِائَةِ دِرْهَمٍ فَدَفَعَهَا إِلَيْهِ ‏.‏ قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ عَبْدًا قِبْطِيًّا مَاتَ عَامَ أَوَّلَ


حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ رُمْحٍ عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْمُدَبَّرِ نَحْوَ حَدِيثِ حَمَّادٍ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ ‏.‏

அன்ஸாரிகளில் ஒருவர் (தம்) அடிமை ஒருவரைத் தமது இறப்புக்குப் பின் விடுதலை பெற்றவராவார் என்று அறிவித்திருந்தார். அவரிடம் அந்த அடிமையைத் தவிர சொத்து என்று எதுவுமிருக்கவுமில்லை. இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, “என்னிடமிருந்து இந்த அடிமையை (விலைக்கு) வாங்குபவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அந்த அடிமையை நுஐம் பின் அப்தில்லாஹ் (ரலி) எண்ணூறு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொண்டார்கள். அவற்றை நபி (ஸல்) அந்த அன்ஸாரியிடம் ஒப்படைத்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

“அவர் (எகிப்து நாட்டு) கிப்தீ அடிமையாவார் என்றும் அவர் (இப்னு ஜுபைர் – ரலி அவர்களின் ஆட்சியின்) முதலாம் ஆண்டில் இறந்துவிட்டார் என்றும் ஜாபிர் (ரலி) சொல்லக் கேட்டிருக்கின்றேன்” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அம்ரு பின் தீனார் (ரஹ்) கூறியுள்ளார்.

Share this Hadith: