அத்தியாயம்: 27, பாடம்: 8, ஹதீஸ் எண்: 3135

وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، التَّيْمِيِّ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ قَالَ :‏ 

كُنْتُ أَضْرِبُ غُلاَمًا لِي فَسَمِعْتُ مِنْ خَلْفِي صَوْتًا ‏”‏اعْلَمْ أَبَا مَسْعُودٍ لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ”‏  فَالْتَفَتُّ فَإِذَا هُوَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هُوَ حُرٌّ لِوَجْهِ اللَّهِ‏.‏ فَقَالَ ‏”‏أَمَا لَوْ لَمْ تَفْعَلْ لَلَفَحَتْكَ النَّارُ أَوْ لَمَسَّتْكَ النَّارُ‏”‏

நான் (ஒரு முறை) என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னாலிருந்து யாரோ, “அபூமஸ்ஊதே! அறிந்துகொள், இவர்மீது உமக்கிருக்கும் அதிகாரத்தைவிடப் பன் மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது” என்று கூறுவதை நான் செவியுற்றுத் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருந்தார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் உவப்புக்காக (இவரை நான் விடுதலை செய்துவிட்டேன்) இவர் சுதந்திரமானவர்” என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அறிந்துகொள்! நீ இவ்வாறு (விடுதலை) செய்திருக்காவிட்டால் நரகம் உம்மை எரித்திருக்கும் அல்லது தீண்டியிருக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் அல்அன்ஸாரீ (ரலி)

Share this Hadith: