அத்தியாயம்: 28, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3180

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا أَبُو يُونُسَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ أَنَّ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ، حَدَّثَهُ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ قَالَ:‏

إِنِّي لَقَاعِدٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَ رَجُلٌ يَقُودُ آخَرَ بِنِسْعَةٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذَا قَتَلَ أَخِي ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”أَقَتَلْتَهُ‏”‏ ‏.‏ فَقَالَ إِنَّهُ لَوْ لَمْ يَعْتَرِفْ أَقَمْتُ عَلَيْهِ الْبَيِّنَةَ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَتَلْتُهُ قَالَ ‏”كَيْفَ قَتَلْتَهُ‏”‏ ‏.‏ قَالَ كُنْتُ أَنَا وَهُوَ نَخْتَبِطُ مِنْ شَجَرَةٍ فَسَبَّنِي فَأَغْضَبَنِي فَضَرَبْتُهُ بِالْفَأْسِ عَلَى قَرْنِهِ فَقَتَلْتُهُ ‏.‏ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”هَلْ لَكَ مِنْ شَىْءٍ تُؤَدِّيهِ عَنْ نَفْسِكَ‏”‏ ‏.‏ قَالَ مَا لِي مَالٌ إِلاَّ كِسَائِي وَفَأْسِي ‏.‏ قَالَ ‏”فَتَرَى قَوْمَكَ يَشْتَرُونَكَ‏”‏ ‏.‏ قَالَ أَنَا أَهْوَنُ عَلَى قَوْمِي مِنْ ذَاكَ ‏.‏ فَرَمَى إِلَيْهِ بِنِسْعَتِهِ ‏.‏ وَقَالَ ‏”دُونَكَ صَاحِبَكَ‏”‏ ‏.‏ فَانْطَلَقَ بِهِ الرَّجُلُ فَلَمَّا وَلَّى قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”إِنْ قَتَلَهُ فَهُوَ مِثْلُهُ‏”‏ ‏.‏ فَرَجَعَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ قُلْتَ ‏”‏إِنْ قَتَلَهُ فَهُوَ مِثْلُهُ‏”‏ ‏.‏ وَأَخَذْتُهُ بِأَمْرِكَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”أَمَا تُرِيدُ أَنْ يَبُوءَ بِإِثْمِكَ وَإِثْمِ صَاحِبِكَ‏”‏ ‏.‏ قَالَ يَا نَبِيَّ اللَّهِ – لَعَلَّهُ قَالَ – بَلَى ‏.‏ قَالَ ‏”فَإِنَّ ذَاكَ كَذَاكَ‏”‏ ‏.‏ قَالَ فَرَمَى بِنِسْعَتِهِ وَخَلَّى سَبِيلَهُ ‏.‏

நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த ஒருபோது, ஒருவர் மற்றொருவரைத் தோல் வாரினால் (கழுத்தில் போட்டு) இழுத்துக்கொண்டு வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! இவர் என் சகோதரனைக் கொலை செய்துவிட்டார்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ அவரைக் கொலை செய்தாயா?” என்று கேட்டார்கள். அப்போது அவரை இழுத்துக்கொண்டு வந்தவர், “இவர் கொலையை ஒப்புக்கொள்ளாவிட்டால் இவருக்கெதிரான ஆதாரத்தை முன்வைப்பேன்” என்றும் கூறினார். அதற்கு அவர், “ஆம், நான் அவரைக் கொலை செய்தேன்” என்று (ஒப்புதல் வாக்குமூலம்) சென்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எப்படிக் கொன்றாய்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நானும் அவரும் ஒரு மரத்தில் (தடியால் அடித்து) இலை உதிர்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அவர் என்னை ஏசினார். எனக்குக் கோபம் ஏற்பட்டது. உடனே நான் (என் கையிலிருந்த) கோடரியால் அவரது உச்சந் தலையில் அடித்துவிட்டேன். அவர் இறந்துவிட்டார். (திட்டமிட்டு இந்தக் கொலையை நான் செய்யவில்லை)” என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவருக்கு இழப்பீடு வழங்க உம்மிடம் ஏதேனும் (பொருள்) உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “என்னிடம் எனது போர்வையையும் எனது கோடரியையும் தவிர வேறொன்றுமில்லை” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன்னுடைய கூட்டத்தார் உனக்காக (இழப்பீடு) திரட்டித் தருவார்கள் என்று நீ கருதுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கவர், “நான் என் கூட்டத்தாரிடம் அந்த அளவுக்கு மதிப்புடையவன் அல்லன்” என்று சொன்னார். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரது (கழுத்தில் கிடந்த) தோல் வாரை, அ(வரை இழுத்துவ)ந்தவரிடம் தூக்கிப் போட்டு, “உம்முடைய ஆளைப் பிடித்துக்கொள்க” என்று சொன்னார்கள். உடனே அந்த மனிதர் அவரை(இழுத்து)க் கொண்டு சென்றார். அவர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவரை இவர் கொன்றுவிட்டால், இவரும் அவரைப் போன்றவரே ஆவார்” என்று கூறினார்கள்.

அவர் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் இவரைக் கொன்றுவிட்டால் நானும் இவரைப் போன்றவனே ஆவேன் என்று நீங்கள் கூறியதாகத் தெரிகிறது. உங்களது கட்டளைப்படிதானே நான் இவரை பிடித்துச்சென்றேன்” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவர் உமது பாவச் சுமையையும் (கொல்லப்பட்ட) உன் உறவினரின் பாவச் சுமையையும் சுமந்து கொண்டு செல்வதை நீர் விரும்புகிறீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! ஆம். அது அவ்வாறே ஆகட்டும்” என்று கூறிவிட்டு, அவரது (கழுத்தில் கிடந்த) தோல் வாரைத் தூக்கியெறிந்து, அவரை அவரது வழியிலேயே செல்ல விட்டுவிட்டார்.

அறிவிப்பாளர் : வாயில் பின் ஹுஜ்ரு (ரலி)

Share this Hadith: