அத்தியாயம்: 28, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3181

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ سَالِمٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ قَالَ:‏

أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِرَجُلٍ قَتَلَ رَجُلاً فَأَقَادَ وَلِيَّ الْمَقْتُولِ مِنْهُ فَانْطَلَقَ بِهِ وَفِي عُنُقِهِ نِسْعَةٌ يَجُرُّهَا فَلَمَّا أَدْبَرَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏الْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ‏”‏ ‏.‏ فَأَتَى رَجُلٌ الرَّجُلَ فَقَالَ لَهُ مَقَالَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَخَلَّى عَنْهُ ‏‏


قَالَ إِسْمَاعِيلُ بْنُ سَالِمٍ فَذَكَرْتُ ذَلِكَ لِحَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ فَقَالَ حَدَّثَنِي ابْنُ أَشْوَعَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم إِنَّمَا سَأَلَهُ أَنْ يَعْفُوَ عَنْهُ فَأَبَى ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் கொண்டுவரப்பட்டார். அவர் மற்றொருவரைக் கொலை செய்திருந்தார். அப்போது கொலையுண்டவரின் பொறுப்பாளர் கொலையாளியைப் பழிக்குப் பழி தீர்த்துக்கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதித்தார்கள். அவரும் அக்கொலையாளியின் கழுத்தில் ஒரு தோல் வாரைப் போட்டு இழுத்துக்கொண்டு சென்றார்.

அவர் திரும்பிச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கொன்றவரும் கொல்லப்பட்டவரும் நரகவாசிகள் ஆவர்” என்று சொன்னார்கள். (அதைச் செவியுற்ற) ஒருவர் (கொலையுண்டவரின்) பொறுப்பாளரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதைத் தெரிவித்தார். எனவே, அவர் அக்கொலையாளியை (மன்னித்து) விட்டுவிட்டார்.

அறிவிப்பாளர் : வாயில் பின் ஹுஜ்ரு (ரலி) வழியாக அன்னாரின் மகன் அல்கமா (ரஹ்)


குறிப்பு :

“நான் இந்த ஹதீஸை ஹபீப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்களிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள், “நபி (ஸல்) (தவறுதலாகக் கொலை செய்த) அவரை மன்னித்துவிடுமாறு (கொலையுண்டவரின்) பொறுப்பாளரிடம் கேட்டார்கள். அவர் மறுத்துவிட்டார். (எனவேதான், அவ்வாறு கூறினார்கள்) என்று ஸயீத் பின் அம்ரு பின் அஷ்வஉ (ரஹ்) கூறினார்கள்” என்பதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயீல் பின் ஸாலிம் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

Share this Hadith: