அத்தியாயம்: 28, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3169

حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ بُدَيْلٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى:‏

أَنَّ أَجِيرًا، لِيَعْلَى ابْنِ مُنْيَةَ عَضَّ رَجُلٌ ذِرَاعَهُ فَجَذَبَهَا فَسَقَطَتْ ثَنِيَّتُهُ فَرُفِعَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَبْطَلَهَا وَقَالَ ‏ “أَرَدْتَ أَنْ تَقْضَمَهَا كَمَا يَقْضَمُ الْفَحْلُ‏”‏ ‏

யஅலா பின் முன்யா (ரலி) அவர்களுடைய ஊழியர் ஒருவரின் முன்கையை ஒருவர் கடித்துவிட்டார். ஊழியர் தனது கையை இழுக்க, கடித்தவரது முன்பல் ஒன்று (கழன்று) விழுந்துவிட்டது. இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, அவ்வழக்கை நபியவர்கள் தள்ளுபடி செய்தார்கள். மேலும், “கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று அவரது கையை நீ கடிக்க முனைந்தாய். (எனவே, உனக்கு இழப்பீடு இல்லை)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : யஅலா பின் முன்யா (ரலி) வழியாக ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்)

Share this Hadith: