அத்தியாயம்: 29, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3197

وَحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ :‏

أَنَّ امْرَأَةً مِنْ بَنِي مَخْزُومٍ سَرَقَتْ فَأُتِيَ بِهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَعَاذَتْ بِأُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ وَاللَّهِ لَوْ كَانَتْ فَاطِمَةُ لَقَطَعْتُ يَدَهَا ‏”‏ ‏‏ فَقُطِعَتْ ‏.‏

பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள். அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்பெண் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் (தண்டனையிலிருந்து தன்னைக்) காப்பாற்றும்படி கோரினாள்.

அப்போது நபி (ஸல்), “அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஃபாத்திமா (இக்குற்றத்தைச்) செய்திருந்தாலும் அவரது கையை நான் துண்டித்திருப்பேன்” என்று கூறினார்கள். பிறகு அப்பெண்ணின் கை துண்டிக்கப்பட்டது.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

Share this Hadith: