அத்தியாயம்: 29, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3216

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ أَبُو دَاوُدَ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ السُّدِّيِّ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، قَالَ خَطَبَ عَلِيٌّ فَقَالَ :‏

يَا أَيُّهَا النَّاسُ أَقِيمُوا عَلَى أَرِقَّائِكُمُ الْحَدَّ مَنْ أَحْصَنَ مِنْهُمْ وَمَنْ لَمْ يُحْصِنْ فَإِنَّ أَمَةً لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم زَنَتْ فَأَمَرَنِي أَنْ أَجْلِدَهَا فَإِذَا هِيَ حَدِيثُ عَهْدٍ بِنِفَاسٍ فَخَشِيتُ إِنْ أَنَا جَلَدْتُهَا أَنْ أَقْتُلَهَا فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏ أَحْسَنْتَ ‏”‏


وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنِ السُّدِّيِّ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ مَنْ أَحْصَنَ مِنْهُمْ وَمَنْ لَمْ يُحْصِنْ ‏.‏ وَزَادَ فِي الْحَدِيثِ ‏ “‏ اتْرُكْهَا حَتَّى تَمَاثَلَ ‏”‏

அலீ (ரலி) (எங்களிடையே ஒரு நாள்) உரையாற்றியபோது, “மக்களே! உங்கள் அடிமைகள் திருமணம் ஆனவர்களாகவோ ஆகாதவர்களாகவோ இருந்தாலும் அவர்கள் மீதும் குற்றவியல் தண்டனையை நிறைவேற்றுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப் பெண் ஒருவர் விபச்சாரம் செய்துவிட்டார். எனவே, அவருக்குச் சாட்டையடிகள் வழங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு உத்தரவிட்டார்கள்.

ஆனால், அவருக்கு அப்போதுதான் மகப்பேறினால் இரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தது. அவருக்குச் சாட்டையடி தண்டனையை நிறைவேற்றினால் (எங்கே) அவரை நான் கொன்றுவிடுவேனோ என அஞ்சினேன். (எனவே, தண்டனையைத் தள்ளிவைத்தேன்) இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, “நீங்கள் செய்தது சரிதான்” என்று அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஹபீப் பின் ரபீஆ (ரஹ்)


குறிப்பு :

யஹ்யா இப்னு ஆதம் (ரஹ்) வழி அறிவிப்பில், “திருமணம் ஆனவர்களாகவோ ஆகாதவர்களாகவோ இருந்தாலும் …” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. இந்த அறிவிப்பில், “அவள் குணமடை(ந்து இயல்பு நிலையை அடை)யும்வரை அவளை விட்டுவிடுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: