அத்தியாயம்: 3, பாடம்: 12, ஹதீஸ் எண்: 498

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُلَيَّةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ بْنِ عُمَيْرٍ ‏ ‏قَالَ بَلَغَ ‏ ‏عَائِشَةَ ‏
‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ‏ ‏يَأْمُرُ النِّسَاءَ إِذَا اغْتَسَلْنَ أَنْ ‏ ‏يَنْقُضْنَ ‏ ‏رُءُوسَهُنَّ فَقَالَتْ يَا عَجَبًا ‏ ‏لِابْنِ عَمْرٍو ‏ ‏هَذَا يَأْمُرُ النِّسَاءَ إِذَا اغْتَسَلْنَ أَنْ يَنْقُضْنَ رُءُوسَهُنَّ أَفَلَا يَأْمُرُهُنَّ أَنْ يَحْلِقْنَ رُءُوسَهُنَّ لَقَدْ كُنْتُ ‏ ‏أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ إِنَاءٍ وَاحِدٍ وَلَا أَزِيدُ عَلَى أَنْ أُفْرِغَ عَلَى رَأْسِي ثَلَاثَ إِفْرَاغَاتٍ

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள், “பெண்கள் குளிக்கும்போது தம் பின்னலை அவிழ்த்து விட வேண்டும்” என்று வலியுறுத்தி வந்த செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், “பெண்கள் குளிக்கும்போது தம் சடைப்பின்னலை அவிழ்த்து விட வேண்டும் என்று உத்தரவு போடுவதுபோல் கூறும் இப்னு அம்ரின் கூற்று வியப்புக்குரியது! தலையை மழித்துக் கொள்ளுமாறு பெண்களுக்கு அவர் கட்டளையிட வேண்டியதுதானே? நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். என் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுவதைவிடக் கூடுதலாக வேறொன்றும் நான் செய்ததில்லை” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உமைத் பின் உமைர் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment