அத்தியாயம்: 3, பாடம்: 14, ஹதீஸ் எண்: 502

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏
‏اسْتَفْتَتْ ‏ ‏أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ إِنِّي أُسْتَحَاضُ فَقَالَ إِنَّمَا ‏ ‏ذَلِكِ ‏ ‏عِرْقٌ ‏ ‏فَاغْتَسِلِي ثُمَّ صَلِّي فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلَاةٍ ‏
‏قَالَ ‏ ‏اللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏لَمْ يَذْكُرْ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَ ‏ ‏أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ ‏ ‏أَنْ تَغْتَسِلَ عِنْدَ كُلِّ صَلَاةٍ وَلَكِنَّهُ شَيْءٌ فَعَلَتْهُ هِيَ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏ابْنَةُ جَحْشٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏أُمَّ حَبِيبَةَ ‏

உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “நான் தொடர் குருதிப் போக்குடையவள்” எனக் கூறித் தீர்ப்புக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது ஒருவகை சிரைக் குருதி நோயாகும். எனவே (வழக்கமான மாதவிடாய்க் காலம் முடிந்தவுடன்) குளித்து விட்டுத் தொழுது கொள்!” எனக் கூறினார்கள். என்றாலும் உம்மு ஹபீபா (ரலி) ஒவ்வொரு தொழுகைக்கு(முன்னரு)ம் குளிக்கும் வழக்கம் உடையவராக இருந்தார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

குறிப்பு:

(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்), “உம்மு ஹபீபா (ரலி) அவர்களை ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்” என்று கூறவில்லை. மாறாக, உம்மு ஹபீபா தாமாகவே அவ்வாறு செய்து வந்தார் என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான லைஸ் பின் ஸஅத் (ரஹ்) கூறுகின்றார்.

இப்னு ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில் நபித்தோழியின் ‘உம்மு ஹபீபா’ எனும் பெயர் இல்லாமல் ‘ஜஹ்ஷின் மகள்’ என்று இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment