அத்தியாயம்: 3, பாடம்: 15, ஹதீஸ் எண்: 508

و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذَةَ ‏ ‏قَالَتْ ‏
‏سَأَلْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقُلْتُ مَا بَالُ الْحَائِضِ تَقْضِي الصَّوْمَ وَلَا تَقْضِي الصَّلَاةَ فَقَالَتْ ‏ ‏أَحَرُورِيَّةٌ ‏ ‏أَنْتِ قُلْتُ لَسْتُ ‏ ‏بِحَرُورِيَّةٍ وَلَكِنِّي أَسْأَلُ قَالَتْ كَانَ يُصِيبُنَا ذَلِكَ فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ وَلَا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلَاةِ ‏

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணின் நிலை என்ன? (விடுபட்ட) நோன்பை மட்டும் அவள் மீண்டும் நோற்க வேண்டும். (விடுபட்டத்) தொழுகைகளை மீண்டும் தொழக்கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீ ‘ஹரூரா’க்காரியா?” என்று கேட்டார்கள். “நான் ‘ஹரூரா’க்காரி அல்லள். ஆயினும், (தெரிந்து கொள்வதற்காகவே) கேட்கிறேன்” என்றேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “எங்களுக்கும் (மாதவிடாய்) ஏற்படத்தான் செய்தது. அப்போது விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்குமாறு நாங்கள் கட்டளை இடப்பட்டோம்; விடுபட்டத் தொழுகையை மீண்டும் தொழுமாறு நாங்கள் கட்டளை இடப்படவில்லை” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஆதா பின்த் அப்தில்லாஹ் (ரஹ்).

அத்தியாயம்: 3, பாடம்: 15, ஹதீஸ் எண்: 507

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُعَاذَةَ ‏
‏أَنَّهَا سَأَلَتْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَتَقْضِي الْحَائِضُ الصَّلَاةَ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَحَرُورِيَّةٌ ‏ ‏أَنْتِ قَدْ ‏ ‏كُنَّ نِسَاءُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَحِضْنَ أَفَأَمَرَهُنَّ أَنْ يَجْزِينَ ‏
‏قَالَ ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏تَعْنِي يَقْضِينَ ‏

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்ட பெண் விடுபட்ட தொழுகைகளை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீ ‘ஹரூரா’க்காரியா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருக்கு மாதவிடாய் ஏற்பட்ட காலத்தில் (விடுபட்ட தொழுகைகளை) மீட்குமாறு அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளை இடவில்லையே!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஆதா பின்த் அப்தில்லாஹ் (ரஹ்).

அத்தியாயம்: 3, பாடம்: 15, ஹதீஸ் எண்: 506

حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ الرِّشْكِ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذَةَ ‏ ‏أَنَّ ‏
‏امْرَأَةً سَأَلَتْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقَالَتْ ‏ ‏أَتَقْضِي إِحْدَانَا الصَّلَاةَ أَيَّامَ مَحِيضِهَا فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَحَرُورِيَّةٌ ‏ ‏أَنْتِ قَدْ ‏ ‏كَانَتْ إِحْدَانَا تَحِيضُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ لَا تُؤْمَرُ بِقَضَاءٍ ‏

ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “எங்களில் ஒருத்தி மாதவிடாய் நாட்களில் தமக்கு விடுப்பட்டுப் போன தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீ ‘ஹரூரா’க்காரியா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் எங்களில் மாதவிடாய் ஏற்படும் ஒருவள், தொழுகைகளை மீட்குமாறு கட்டளையிடப் பட்டதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்).