و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَزِيدَ قَالَ سَمِعْتُ مُعَاذَةَ
أَنَّهَا سَأَلَتْ عَائِشَةَ أَتَقْضِي الْحَائِضُ الصَّلَاةَ فَقَالَتْ عَائِشَةُ أَحَرُورِيَّةٌ أَنْتِ قَدْ كُنَّ نِسَاءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحِضْنَ أَفَأَمَرَهُنَّ أَنْ يَجْزِينَ
قَالَ مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ تَعْنِي يَقْضِينَ
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்ட பெண் விடுபட்ட தொழுகைகளை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீ ‘ஹரூரா’க்காரியா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருக்கு மாதவிடாய் ஏற்பட்ட காலத்தில் (விடுபட்ட தொழுகைகளை) மீட்குமாறு அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளை இடவில்லையே!” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக முஆதா பின்த் அப்தில்லாஹ் (ரஹ்).