அத்தியாயம்: 3, பாடம்: 19, ஹதீஸ் எண்: 514

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ بَكْرٍ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُمَا ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُا ‏
‏لَمَّا بُنِيَتْ ‏ ‏الْكَعْبَةُ ‏ ‏ذَهَبَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعَبَّاسٌ ‏ ‏يَنْقُلَانِ حِجَارَةً فَقَالَ ‏ ‏الْعَبَّاسُ ‏ ‏لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اجْعَلْ ‏ ‏إِزَارَكَ ‏ ‏عَلَى ‏ ‏عَاتِقِكَ ‏ ‏مِنْ الْحِجَارَةِ فَفَعَلَ ‏ ‏فَخَرَّ ‏ ‏إِلَى الْأَرْضِ ‏ ‏وَطَمَحَتْ ‏ ‏عَيْنَاهُ إِلَى السَّمَاءِ ثُمَّ قَامَ فَقَالَ ‏ ‏إِزَارِي ‏ ‏إِزَارِي فَشَدَّ عَلَيْهِ ‏ ‏إِزَارَهُ ‏
‏قَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏فِي رِوَايَتِهِ عَلَى رَقَبَتِكَ وَلَمْ يَقُلْ عَلَى عَاتِقِكَ ‏

கஅபா புதுப்பித்துக் கட்டப் பட்டபோது (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து வந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களை நோக்கி, “கல் சுமப்பதற்கு (வசதியாக) உமது கீழாடையை அவிழ்த்துத் தோளில் (சும்மாடாக) வைத்துக் கொள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அவர்களுடைய கண்கள் வானத்தை நோக்கி நிலைகுத்தி நின்றன. பிறகு மயக்கம் தீர்ந்து எழுந்தவுடன், “என் கீழாடை, என் கீழாடை” என்றார்கள். கீழாடை (எடுத்துக் கொடுக்கப் பட்டவுடன்) அதனை இறுக்கிக் கட்டிக் கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

குறிப்பு:

முஹம்மது பின் ராஃபிஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “உமது தோளில்” என்பதற்குப் பகரமாக “உமது பிடரியில்” என இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment