அத்தியாயம்: 3, பாடம்: 27, ஹதீஸ் எண்: 548

حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا وَقَالَ ‏ ‏ابْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَمْرُو بْنُ الرَّبِيعِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا الْخَيْرِ ‏ ‏حَدَّثَهُ قَالَ ‏ ‏رَأَيْتُ عَلَى ‏ ‏ابْنِ وَعْلَةَ السَّبَإِيِّ ‏ ‏فَرْوًا فَمَسِسْتُهُ فَقَالَ مَا لَكَ تَمَسُّهُ قَدْ ‏ ‏سَأَلْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ‏ ‏قُلْتُ ‏
‏إِنَّا نَكُونُ ‏ ‏بِالْمَغْرِبِ ‏ ‏وَمَعَنَا ‏ ‏الْبَرْبَرُ ‏ ‏وَالْمَجُوسُ ‏ ‏نُؤْتَى بِالْكَبْشِ قَدْ ذَبَحُوهُ وَنَحْنُ لَا نَأْكُلُ ذَبَائِحَهُمْ وَيَأْتُونَا ‏ ‏بِالسِّقَاءِ ‏ ‏يَجْعَلُونَ فِيهِ ‏ ‏الْوَدَكَ ‏ ‏فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏قَدْ سَأَلْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ فَقَالَ ‏ ‏دِبَاغُهُ ‏ ‏طَهُورُهُ ‏

நான் அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ (ரஹ்) அவர்கள் தோலாடை ஒன்றை அணிந்திருப்பதைக் கண்டேன். நான் அதைத் தடவிப்பார்த்தேன். அப்போது அவர்கள், “ஏன் இதைத் தடவிப் பார்க்கிறீர்கள்? நாங்கள் மேற்கே வசித்து வருகிறோம். எங்களுடன் (ஆப்பிரிக்கர்களான) பர்பர் இன மக்களும் (தீவணங்கிகளான) மஜூஸிகளும் வசித்து வருகின்றனர். அவர்கள் அறுத்த ஆடுகள் எங்களிடம் கொண்டு வரப்படுவதுண்டு. ஆனால், அவர்கள் அறுத்ததை நாங்கள் சாப்பிடுவதில்லை. மேலும், அவர்கள் தோல்பைகளில் கொழுப்புகளை வைத்து எங்களிடம் கொண்டு வருகின்றனரே (அந்தத் தோலை நாங்கள் பயன்படுத்தலாமா?) என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நாங்கள் இதைக் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவி இருக்கிறோம். அதற்கு அவர்கள், ‘அதைப் பதனிடுவதே அதைத் தூய்மையாக்கி விடும்’ என்று பதிலளித்தார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment