அத்தியாயம்: 3, பாடம்: 03, ஹதீஸ் எண்: 453

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏وَسُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏كُنْتُ ‏ ‏أَشْرَبُ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ ‏ ‏فِيَّ فَيَشْرَبُ ‏ ‏وَأَتَعَرَّقُ ‏ ‏الْعَرْقَ ‏ ‏وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ ‏ ‏فِيَّ ‏
‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏فَيَشْرَبُ ‏

நான் மாதவிடாய்க்காரியாக இருக்கும்போது (ஏதேனும் பானத்தைப் பகுதி) அருந்தி விட்டு மீதியை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். நான் மாதவிடாய்காரிக்காரியாக இருக்கும்போது இறைச்சியுள்ள எலும்புத் துண்டை(ப் பகுதி)க் கடித்து விட்டு நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

குறிப்பு:

ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) வழி அறிவிப்பில் “அவர்கள் அருந்துவார்கள்” எனும் வாசகம் இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment