அத்தியாயம்: 32, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3284

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَهَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالاَ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَطَعَ نَخْلَ بَنِي النَّضِيرِ وَحَرَّقَ وَلَهَا يَقُولُ حَسَّانُ وَهَانَ عَلَى سَرَاةِ بَنِي لُؤَىٍّ حَرِيقٌ بِالْبُوَيْرَةِ مُسْتَطِيرُ وَفِي ذَلِكَ نَزَلَتْ ‏{مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا‏}‏ الآيَةَ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை வெட்டினார்கள்; (சில மரங்களை) எரித்தார்கள். அந்த நிகழ்வு குறித்தே (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) பின்வருமாறு பாடினார்கள்:

புவைராவில்
கொழுந்துவிட்டெரிந்த நெருப்பு
பனூ லுஅய் குலத்தாரின்
(கையாலாகாத) தலைவர்களுக்கு
எளிதாகிவிட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாகவே “நீங்கள் (அவர்களுடைய) பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அவற்றின் தூரோடு அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடனேயே நடந்தன” (59:5) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

Share this Hadith: