அத்தியாயம்: 32, பாடம்: 33, ஹதீஸ் எண்: 3333

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَوَكِيعٌ، عَنْ زَكَرِيَّاءَ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُطِيعٍ، عَنْ أَبِيهِ قَالَ :‏

سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ يَوْمَ فَتْحِ مَكَّةَ ‏ “‏ لاَ يُقْتَلُ قُرَشِيٌّ صَبْرًا بَعْدَ هَذَا الْيَوْمِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ‏”‏


حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَزَادَ قَالَ وَلَمْ يَكُنْ أَسْلَمَ أَحَدٌ مِنْ عُصَاةِ قُرَيْشٍ غَيْرَ مُطِيعٍ كَانَ اسْمُهُ الْعَاصِي فَسَمَّاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُطِيعًا

நபி (ஸல்) மக்கா வெற்றி நாளில், “இன்றைக்குப் பிறகு மறுமை நாள்வரை குறைஷியர் எவரும் கட்டிவைத்து அடிக்கப்படும் நிலை ஏற்படாது” என்று கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பாளர் : முதீஉ பின் அல்அஸ்வத் பின் ஹாரிஸா (ரலி)


குறிப்பு :

நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அன்றைய தினம் குறைஷியரில் ‘அல்ஆஸ்’ எனும் பெயர் பெற்றிருந்தவர்களில் முதீஉ (ரலி) அவர்களைத் தவிர வேறெவரும் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. அப்போது முதீஉ அவர்களுடைய பெயர் ‘அல்ஆஸீ’ (மாறு செய்பவர்) என்றிருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘முதீஉ’ (கீழ்ப்படிந்தவர்) என்று பெயர் மாற்றினார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: