அத்தியாயம்: 32, பாடம்: 34, ஹதீஸ் எண்: 3336

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ:‏

أَنَّ قُرَيْشًا، صَالَحُوا النَّبِيَّ صلى الله عليه وسلم فِيهِمْ سُهَيْلُ بْنُ عَمْرٍو فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعَلِيٍّ ‏”‏ اكْتُبْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ‏”‏ ‏.‏ قَالَ سُهَيْلٌ أَمَّا بِاسْمِ اللَّهِ فَمَا نَدْرِي مَا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَكِنِ اكْتُبْ مَا نَعْرِفُ بِاسْمِكَ اللَّهُمَّ فَقَالَ ‏”‏ اكْتُبْ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏”‏ ‏.‏ قَالُوا لَوْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللَّهِ لاَتَّبَعْنَاكَ وَلَكِنِ اكْتُبِ اسْمَكَ وَاسْمَ أَبِيكَ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ اكْتُبْ مِنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ ‏”‏ ‏.‏ فَاشْتَرَطُوا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ مَنْ جَاءَ مِنْكُمْ لَمْ نَرُدَّهُ عَلَيْكُمْ وَمَنْ جَاءَكُمْ مِنَّا رَدَدْتُمُوهُ عَلَيْنَا فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَنَكْتُبُ هَذَا قَالَ ‏”‏ نَعَمْ إِنَّهُ مَنْ ذَهَبَ مِنَّا إِلَيْهِمْ فَأَبْعَدَهُ اللَّهُ وَمَنْ جَاءَنَا مِنْهُمْ سَيَجْعَلُ اللَّهُ لَهُ فَرَجًا وَمَخْرَجًا ‏”‏ ‏

ஸுஹைல் பின் அம்ருவைத் தங்களுடன் வைத்துக்கொண்டு குறைஷியர்,  நபி (ஸல்) அவர்களுடன் சமாதான உடன்படிக்கை எழுதினர்.  நபி (ஸல்), அலீ (ரலி) அவர்களிடம் “(உடன்படிக்கைப் பத்திரத்தில் முதலில்) பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்…) என எழுதுவீராக!” என்று கூறினார்கள்.

அப்போது ஸுஹைல், “பிஸ்மில்லாஹ் என்பது சரி (அதை நாங்கள் அறிவோம்); அது என்ன பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்? அதை நாங்கள் அறிந்திருக்கவில்லையே? எனவே, நாங்கள் அறிந்துள்ள ‘பிஸ்மிக்கல்லாஹும்ம’ (அல்லாஹ்வே! உன் பெயரால்) எனும் வாசகத்தை எழுதுங்கள்” என்று கூறினார். (அவ்வாறே எழுதும்படி நபி (ஸல்) உத்தரவிட்டார்கள்) பிறகு நபி (ஸல்), “அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து… என எழுதுவீராக!” என்று (அலீயிடம்) கூறினார்கள்.

அப்போது குறைஷியர், “நீர் இறைவனின் தூதர்தாம் என நாங்கள் அறிந்திருப்போமாயின் நாங்கள் உம்மைப் பின்பற்றி இருப்போம். மாறாக, உமது பெயரை, உம் தந்தையின் பெயர் சேர்த்து எழுதுக” என்று கூறினர். ஆகவே, நபி (ஸல்), (அலீ (ரலி) அவர்களிடம்) “அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதிடமிருந்து என எழுதுவீராக” என்று கூறினார்கள்.

அப்போது குறைஷியர், “உங்களிடமிருந்து யாரேனும் (எங்களிடம்) வந்துவிட்டால் அவரை நாங்கள் திருப்பியனுப்பமாட்டோம். எங்களிடமிருந்து யாரேனும் (உங்களிடம்) வந்துவிட்டால் அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பிவிட வேண்டும்” என்று நபிகளாரிடம் நிபந்தனையிட்டனர்.

முஸ்லிம்கள், “அல்லாஹ்வின் தூதரே! (பாதகமான நிபந்தனைகள் கொண்ட) இதை நாம் எழுத வேண்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்), “ஆம்” என்று கூறி விட்டு, “யாரேனும் நம்மிடம் வந்துவிட்டு (மதம் மாறிச்) சென்றால் அவரை அல்லாஹ் (தனது அருளிலிருந்து) அப்புறப்படுத்திவிடுவான். அவர்களிடமிருந்து யாரேனும் நம்மிடம் வந்தால் (அவர் திருப்பி அனுப்பப்பட்டாலும்) அவருக்கு மகிழ்வையும் (நெருக்கடியிலிருந்து) விடுபடுவதற்கான வழியையும் நிச்சயமாக அல்லாஹ் ஏற்படுத்துவான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith: