அத்தியாயம்: 33, பாடம்: 20, ஹதீஸ் எண்: 3462

وَحَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ أَخْبَرَنِي مُجَاشِعُ بْنُ مَسْعُودٍ السُّلَمِيُّ قَالَ :‏

جِئْتُ بِأَخِي أَبِي مَعْبَدٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ الْفَتْحِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بَايِعْهُ عَلَى الْهِجْرَةِ ‏.‏ قَالَ ‏”‏ قَدْ مَضَتِ الْهِجْرَةُ بِأَهْلِهَا ‏”‏ ‏.‏ قُلْتُ فَبِأَىِّ شَىْءٍ تُبَايِعُهُ قَالَ ‏”‏ عَلَى الإِسْلاَمِ وَالْجِهَادِ وَالْخَيْرِ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو عُثْمَانَ فَلَقِيتُ أَبَا مَعْبَدٍ فَأَخْبَرْتُهُ بِقَوْلِ مُجَاشِعٍ فَقَالَ صَدَقَ ‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عَاصِمٍ، بِهَذَا الإِسْنَادِ قَالَ فَلَقِيتُ أَخَاهُ فَقَالَ صَدَقَ مُجَاشِعٌ ‏.‏ وَلَمْ يَذْكُرْ أَبَا مَعْبَدٍ

மக்கா வெற்றிக்குப் பின் நான் என் சகோதரர் அபூமஅபத் (முஜாலித் பின் மஸ்ஊத்) அவர்களை அழைத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியை இவரிடமிருந்து பெறுங்கள்” என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஹிஜ்ரத் (மக்கா வெற்றிக்கு முன்) அதற்குரியவர்களோடு முடிந்துவிட்டது” என்று கூறினார்கள். நான், “அவ்வாறாயின் (இனி) எதற்காக உறுதிமொழி பெறுவீர்கள்?” என்று கேட்டேன். “இஸ்லாத்தின்படி (உறுதியுடன்) வாழ்ந்திடவும், (தேவைப்பட்டால்) அறப்போர் புரிந்திடவும், (பிற) நற்செயல்கள் செய்திடவும்தான் (உறுதிமொழி பெறுவேன்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : முஜாஷிஉ பின் மஸ்ஊத் அஸ்ஸுலமீ (ரலி)


குறிப்புகள் :

பின்னர் நான் அபூமஅபத் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, அவர்களிடம் முஜாஷிஉ (ரலி) சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். அதற்கு அபூமஅபத் “முஜாஷிஉ சொன்னது உண்மையே” என்றார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) கூறுகின்றார்.

முஹம்மது பின் ஃபுளைல் (ரஹ்) வழி அறிவிப்பில், “பின்னர் நான் முஜாஷிஉ (ரலி) அவர்களின் சகோதரரைச் சந்தித்(து முஜாஷிஉ சொன்ன செய்தியைத் தெரிவித்)தபோது, ‘முஜாஷிஉ சொன்னது உண்மைதான்’ என்று அவர் கூறினார்” என இடம்பெற்றுள்ளது. ஆனால், ‘அபூமஅபத்’ எனும் அவருடைய பெயர் இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment