அத்தியாயம்: 33, பாடம்: 36, ஹதீஸ் எண்: 3504

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ الْهِلاَلِيُّ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لاَ يَجْتَمِعَانِ فِي النَّارِ اجْتِمَاعًا يَضُرُّ أَحَدُهُمَا الآخَرَ ‏”‏ ‏.‏ قِيلَ مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ مُؤْمِنٌ قَتَلَ كَافِرًا ثُمَّ سَدَّدَ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இரண்டு பேரில், ஒருவர் மற்றவருக்கு இடையூறு செய்யும் வகையில் நரகத்தில் ஒருபோதும் ஒன்றுசேரமாட்டார்கள்” என்று கூறினார்கள். “அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு, “ஓர் இறை நம்பிக்கையாளர், இறைமறுப்பாளனை (அறப் போரில்) கொன்ற பின்னர் அவர் (மார்க்கத்தில்) உறுதியோடு நிலைத்திருக்கின்றார். (இவரும் இவரால் கொல்லப்பட்ட இறைமறுப்பாளனும் நரகத்தில் ஒருபோதும் இணையமாட்டார்கள்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

மரணம் வரும் வரைக்கும் மனத்தில் ஈமானிய உறுதி குலைந்துவிடக் கூடாது என்பது இந்த ஹதீஸின் கருவாகும்.

அத்தியாயம்: 33, பாடம்: 36, ஹதீஸ் எண்: 3503

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ يَجْتَمِعُ كَافِرٌ وَقَاتِلُهُ فِي النَّارِ أَبَدًا ‏”‏

“ஓர் இறைமறுப்பாளனும் (அறப்போரில்) அவனைக் கொன்ற(இறைநம்பிக்கை கொண்ட)வரும் ஒருபோதும் நரகத்தில் ஒன்றுசேரமாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)